சனி, 21 மே, 2011

Spectrum-Tata- Ambani. ஸ்பெக்ட்ரம் வழக்கில் அனில் அம்பானி, ரத்தன் டாடாவையும் சேர்க்கக்கோரி மனு

டெல்லி சி.பி.ஐ. தனி கோர்ட்டில் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்ற வக்கீல் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,

"ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில், அரசியல் பெண் தரகர் நீரா ராடியா, தொழில் அதிபர்கள் அனில் அம்பானி, ரத்தன் டாடா, தயாளு அம்மாள் ஆகியோருக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் சி.பி.ஐ. மேற்கொள்ளவில்லை.
 எனவே குற்றப்பத்திரிகையில் அவர்களுடைய பெயரையும் சேர்த்தால்தான் உண்மை வெளிவரும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை வருகிற 30-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது

கருத்துகள் இல்லை: