புதன், 18 மே, 2011

நடிகை ரஞ்சிதாவுக்கு ரூ.20 கோடி: நித்யானந்தா பரபரப்பு பேட்டி

திருவண்ணாமலை: "" எனக்கு எதிராக பொய் வாக்குமூலம் அளிக்க, நடிகை ரஞ்சிதாவுக்கு, 20 கோடி ரூபாய் மற்றும் எம்.எல்.ஏ., சீட் தருவதாக பேரம் பேசப்பட்டது. இதற்கு நடிகை ரஞ்சிதா மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கோர்ட்டில் தெரிவித்து, என் மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய் வழக்கு என நிரூபிப்பேன்,'' என, சாமியார் நித்யானந்தா கூறினார்.

திருவண்ணாமலையில், கிரிவலப் பாதையில் உள்ள நித்யானந்தா பீடத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எந்த வேலையையும் துவங்கும் முன், திருவண்ணாமலைக்கு வந்து அருணாச்சலேஸ்வரரை தரிசித்து விட்டுச் செல்வது என் வழக்கம். இந்தியாவில் நாத்திகம் உள்ள தமிழகத்தில் தான், குடிப்பழக்கத்துக்கு அடிமையானோர் எண்ணிக்கை அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. என் மீது ஆபாச புகார் கூறப்பட்டது. என்னைப் பற்றி அவதூறாக வெளியிட்ட, "சிடி' போலியானது என, கோர்ட்டில் நிரூபிக்க உள்ளேன். இதை வைத்து மிரட்டி, என் பக்தர்களிடம் பணம் பறித்தவர்களையும் கோர்ட்டில் நிரூபிப்பேன், என் மீது பொய் வழக்கு போட்டவர்கள், ரஞ்சிதாவிடம், 20 கோடி ரூபாயும், எம்.எல்.ஏ., சீட்டும் தருகிறேன், எனக்கு (நித்யானந்தா) எதிராக வாக்கு மூலம் கொடு என, கூறியுள்ளனர். அதற்கு ரஞ்சிதா மறுத்துள்ளார். இதையெல்லாம் கோர்ட்டில் தெரிவிப்பேன், என் ஒழுக்கத்தைப் பற்றி சட்ட ரீதியாக கோர்ட் கேட்க வேண்டும், இல்லையெனில் மத ரீதியாக, என் மதத்தைச் சேர்ந்த பெரியவர்கள் கேட்க வேண்டும்.

என் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை, கோர்ட் மூலம் பொய் என நிரூபித்து விட்டு, தமிழகம் முழுவதும் மக்களிடம் நியாயம் கேட்டு பாத யாத்திரை செல்வேன். சித்தர்களுடைய யோகக் கலையையும், மருத்துவக் கலையையும் உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதே எங்கள் பணி. சித்தர்களின் மூலிகையை பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறோம். இவ்வாறு நித்யானந்தா கூறினார்.

 பின்குறிப்பு just for everyday fools : மூலிகை வயாக்ரா மற்றும் நித்ய போக வைட்டமின் போன்ற அரிய வகை ஆராய்ச்சிகளும் வழமை போல் நடைபெறுவதாக நித்திய ஆனந்தா  தெரிவித்தார்.


காந்தியை போன்று தனது மனஉறுதியை சுய சோதனைக்கு உட்படுத்தவே தான் ரஞ்சிதாவோடு பழக நேரிட்டதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: