புதன், 25 மே, 2011

அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக சமச்சீர் கல்வியை நிறுத்தக் கூடாது: கல்வியாளர்கள் வேண்டுகோள்


அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக சமச்சீர் கல்வியை நிறுத்தக் கூடாது: கல்வியாளர்கள் வேண்டுகோள்விருத்தாசலத்தில் இலவச கல்வி உரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சமச்சீர் கல்வியை தடை செய்யாமல் உடனடியாக அமல்படுத்தக் கோரியும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கல்வியாளர் ராஜகோபாலன், நல்ல கல்வியை அரசினால் தரமுடியும். சமச்சீர் கல்வி திட்டம் பல வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சமச்சீர் கல்வித் திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தி வைக்கக் கூடாது.
8ஆம் வகுப்பு பாடத்தில் குடும்ப பட்ஜெட் என்ற பாடம் உள்ளது. அதில் ஒரு குடும்ப தலைவனின் வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு என்ற விபரங்கள் இருக்கின்றன. ஒரு குடுத்துக்கு ஆகும் செலவுகளை 8ஆம் வகுப்பிலேயே ஒரு மாணவன் தெரிந்துகொண்டால், அவன் தன்னுடைய எதிர்காலத்தை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிடுவான். சமச்சீர் கல்வி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பயன்படும் என்பதால் அதனை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக நிறுத்தி வைக்கக் கூடாது என மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.
இதேபோல் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த செந்தாமரைக் கண்ணன், வெங்கடேசன், ராஜு ஆகியோரும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.

கருத்துகள் இல்லை: