வியாழன், 26 மே, 2011

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை மே 30-ம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
 தங்கள் சார்பில் வாதாட மூத்த வழக்கறிஞர் இல்லாததால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் கோரப்பட்டதையடுத்து நீதிபதி மல்லிகார்ஜூனைய்யா விசாரணையை ஒத்திவைத்தார்.

முன்னதாக இந்த வழக்கில் ஒரு சாட்சியை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவுக்கு அரசுத் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் தமிழக அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது இடத்துக்கு புதிய வழக்கறிஞரை ஜெயலலிதா இதுவரை நியமிக்கவில்லை.

கருத்துகள் இல்லை: