ஞாயிறு, 5 டிசம்பர், 2010

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் திடீர் ரத்து

இலங்கைக்கு மூன்றுநாள் விஜயமொன்ற மேற்கொண்டு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வருகை தரவிருந்த பிரித்தானிய வெளிவிகார (தெற்காசிய விவகாரங்கள்) அமைச்சர் அலிஸ்டெயார் பர்ட்டின் விஜயத்தை அந்நாட்டு அரசு இரத்துச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் இந்த வாரம் பங்களாதேஷ்,மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையிலேயே அவர் தனது இலங்கைக்கான விஜயத்தை உடனடியாக இரத்துச் செய்துள்ளார். இதனை இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் லண்டன் சென்றி ருந்த போது எழுந்திருந்த நிலைமைகள் மற்றும் இலங்கையில் பிரித்தானியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங் களையடுத்தே இவரின் விஜயம் இரத்துச் செய் யப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகிறது. இலங்கைக்கான அவரின் விஜயத்தின் போது யாழ்ப்பாணத்துக்கும் செல்லத் திட்ட மிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: