புதன், 8 டிசம்பர், 2010

தாய்லாந்தில் இன்று 50 இலங்கையர் கைது: புலி உறுப்பினர்களும் இருக்கலாம் என சந்தேகம்


தாய்லாந்தில் இன்று ஐம்பது இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐம்பது பேரில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் கணிசமான அளவில் இருக்கலாம் என்றும் தாய்லாந்துப் பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.
இன்று காலை தலைநகரை அண்மித்த பிரதேசமொன்றில் நடாத்தப்பட்ட விசேட சோதனையின் போதே அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தனர்.  இலங்கையிலிருந்து கிடைத்த தகவலொன்றையடுத்தே குறித்த பிரதேசம் சோதனைக்குள்ளாக்கப்பட்டதாக மேலதிக தகவல்களிலிருந்து தெரிய வருகின்றது.
குறித்த ஐம்பது பேரும் சட்டவிரோதமாக தாய்லாந்தில் தங்கியிருந்துள்ளதுடன், வாடகை அறைகளில் ஒழிந்து கொண்டு வசித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது குடிவரவுப் பணியகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக எமது தாய்லாந்துத் தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை: