வியாழன், 19 டிசம்பர், 2019

வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா கைது .. திமுக உட்பட கட்சிகள் கடும் கண்டனம்

news 18.com : மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம்
நடைபெற்றுவருகிறது. கர்நாடாக மாநிலம் பெங்களூரு மாவட்டம் டவுன்ஹால் பகுதியில் காலையில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடைபெறவுள்ளதை அறிந்த காவல்துறையினர் நேற்றே இந்தப் பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இந்தநிலையில், இன்று காலையில் நடைபெற்ற போராட்டத்தில் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கலந்துகொண்டா
அவரைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘ராமச் சந்திர குஹா மற்றும் யோகேந்திர யாதவ் எந்த காவல்துறையினர் கைது செய்ததற்கு நான் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். டெல்லியில் தொலைதொடர்பு சேவையை முடக்கியிருப்பதும் கண்டனத்துக்குரியது. எப்போது எதிர்ப்புக் குரல்கள் ஒடுக்கப்படுகிறதோ, அப்போது ஜனநாயகத்தை சர்வாதிகாரம் நிரப்பும்’ என்று குறிப்பிட்டுள்ளார்
இதுதொடர்பான கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில், ‘ராமச்சந்திர குஹா மற்றும் யோகேந்திர யாதவ் உள்ளிட்டவர்களை கைது செய்வதன் மூலம் சத்தியா கிரக போராட்டத்தை எரியூட்டும் அரசின் முட்டாள் தனமான செயலை நான் கைத்தட்டி வரவேற்கிறேன். அதேநேரத்தில் அவர்களுடனை பாதுகாப்பின் மீது நான் அக்கறைக் கொள்கிறேன். இந்தியா அவர்களுடன் இணைந்து நிற்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: