செவ்வாய், 17 டிசம்பர், 2019

இது தொடர்ந்தால் நாம் இன்னொரு ஜிம்பாப்வே , உகாண்டா ஆகி விடுவோம்?

சாந்தி நாராயணன் : ஒரு எச்சரிக்கை குரல் .
அநேகமாக இந்த வருடம் 1991 க்கு பிறகு நாம் சந்திக்கப் போகும் மிக மோசமான பொருளாதார ஆண்டாக இருக்கும் .
யாரிடமும் பணம் இல்லை . கொத்துக் கொத்தாக வேலை வாய்ப்பு பறிக்கப் படுகிறது .ஒவ்வொரு நாளும் குறைந்தது ஆயிரம் பேர்களை எல்லா கார்பரேட் கம்பெனிகளும் சேர்ந்து வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன.
நகை நட்டை விற்று வணிகம் ஆரம்பித்த சிறு முதலாளிகள் தொழிலாளிகள் ஆகி விட்டார்கள் .
வங்கிகளிடம் கடன் வாங்கிய medium size entrepreneurs சொத்துக்களை விற்று கடன் அடைக்கிறார்கள் ( நானும் ஒருவன் .)
யாராலும் பண விடயத்தில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியவில்லை .
சென்னையில் ரியல் எஸ்டேட் துறையில் கடந்த ஐந்தாண்டுகளாக நிறைய பேர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வருகிறது .
ரியல் எஸ்டேட்டில் small மற்றும் மீடியம் பில்டர்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதில்லை .
அவர்கள் 3 லிருந்து 5 சதவீதம் வெளியே வட்டி வாங்கிக் கட்டிய வீடுகள் பொருளாதர மந்த நிலை / வேலை வாய்ப்பு இழப்பு காரணங்களால் விற்காமல் நிற்க ..
கடன் கொடுத்தவன் கழுத்தைப் பிடிக்க..
முடிவு.. தற்கொலையாகிறது.
கார்பரேட் கம்பெனிகள் முப்பது நாளில் பேமண்ட் கொடுத்தவர்கள் இன்று 90 லிருத்து 120 நாள் வரை எடுத்துக் கொள்கிறார்கள் .
இன்று எல்லாத் தொழிலிலும் மார்ஜின் எனப்படும் நிகர லாபம் குறைந்து விட்டது .

உதாரணம் - எனது ஜெனரேட்டர் இன்டஸ்ட்ரி 2 லிருந்து 3 சதவீதம் லாபத்தில் நடக்கிறது.
என் காசைப் போட்டு நான் கொடுத்த ஜெனரேட்டருக்கு 120 நாள் கழித்து பணம் வந்தால் .. என் கதி.? நான் வங்கிக்குக் கட்டும் வட்டிக்குக் கூட தேறாது அத்துணை நாள் கழித்து கிடைக்கும் அந்தப் பரிவர்த்தனையின் லாபம் .
பொதுவாக இந்தியாவில்
வருடாந்திர சம்பள உயர்வு 8 லிருந்து 15 சதவீதம் ஆக இருந்தது .
இன்று அது 0 to 5 % ஆகி விட்டது.
இது தொடர்ந்தால் நாம் இன்னொரு ஜிம்பாப்வே , உகாண்டா ஆகி விடுவோம் இன்னும் ஒரு ஐந்து வருடத்தில் .முக்கியமாக பண வீக்கத்தில் , அந்நிய செலாவணி கையிருப்பில் , வறுமையில் .
இவை எதைப் பற்றியும் கவலைப் படாமல் மத்திய அரசு article 370 , பாபர் மசூதி தீர்ப்பு இப்போது CAB bill என திசை திருப்புகிறது.
ஆதரிக்கும் மக்களே .. நிச்சயமாக சொல்கிறேன்.
உங்களில் 99 சதவீகத்தினர் வேலையிலும் வணிக்கத்திலும் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மிகப் பெரிய சரிவை சந்தித்துக் கொண்டிருப்பீர்கள்.
நான் கண்கூடாகப் பார்க்கிறேன் ..தினமும் ஒரு ஐம்பது பேரோடு உரையாடுகிறேன். அவர்களில் ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள் .
எல்லோரும் போல அவர்களின் நிலையும் வாழ்க்கைத் தரமும் ஆபத்துக்கு மிக அருகில் சென்று கொண்டிருக்கிறது..
அவர்களிடம் சொல்வதைத்தான் உங்களுக்கும் சொல்கிறேன் ..
நீங்கள் வெந்நீரில் போட்ட ஆமை .. இப்போது கதகதப்பாகத்தான் இருக்கும் .

கருத்துகள் இல்லை: