புதன், 18 டிசம்பர், 2019

புலம் பெயர் புலி ஆதரவாளர்களும்... புதிய இந்திய குடியுரிமை சடடமும்

கருணை கொலைக்கு  அனுமதி கேட்கும் தமிழ் அகதி மாணவன்
ஈழத்தமிழர்களின் மிகப்பெரிய சாபம் புலி அமைப்பு!
அதை விட கொடுமையான விடயம் அந்த புலி அமைப்பின் அத்தனை சகோதர படு கொலைகளையும் கண்டும் காணாதது போல இருந்து அவர்களை மேலும் மேலும் அந்த பாசிச வழியில் செல்ல திமுக தவிர்ந்த ஏனைய திராவிட இயக்கங்கள் ஆதரவு கொடுத்தமை ..!
புலிகளின் படுகொலை கலாச்சாரத்தை கலைஞர் மட்டுமே கடுமையாக கண்டித்தார் .எச்சரிக்கை விடுத்தார் .
திமுகவின் எதிரிகள் புலிகள் அமைப்பை கலைஞருக்கு எதிரான ஒரு ஆயுதமாகவே கொம்பு சீவி கொம்பு சீவி வளர்த்தனர் .
அதுதான் ஒட்டு மொத்த அழிவுக்கும் காரணமாகியது .
கலைஞர் கொஞ்சம் அசந்திருந்தால் கலைஞரையும் கொலை செய்திருப்பார்கள் . அது பற்றி இந்திய புலனாய்வு அமைப்பு கலைஞரை எச்சரித்தது உண்மையே!
இன்று அந்த புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் இலங்கைக்கே சென்றால் தங்களுக்கு இழந்து போன சுமார் நான்கு அல்லது ஐந்து எம்பி தொகுதிகள் கிடைக்கும் என்பதால் அதையே விரும்புகிறார்கள் .
 எனவேதான் கள்ள மௌனம் காக்கிறார்கள் .
இதுதான் ஆர் எஸ் எஸ் இன் விருப்பமும் கூட ..
 புலிகளும் ஆர் எஸ் எஸ் சும் ஒரு கள்ள கூட்டில் உள்ளது ..
 என்னதான் புலி ஆதரவாளர்கள் ஆர் எஸ் எஸ் க்கு பல்லாக்கு தூக்கினாலும் அவர்களுக்கு கிடைக்க போவது அர்ஜுன் சம்பத்துக்கு கிடைக்கும் சீட் தானே தவிர எச் ராஜாக்களுக்கு கிடைக்கும் சீட்டுக்கள் அல்ல
முழு ஈழ தமிழர்களையும் தாழ்ந்த ஜாதியாகத்தான் ஆர் எஸ் எஸ் / பாஜக கருதுகிறது ..

இது புரியாமல் இன்னும் தங்களை கதா நாயகர்கள் என்று கருதும் புலம்ஸ் .. முப்பது வருடங்களாக ..இந்தியாவிலேயே பிறந்து வளரந்தவர்களை எங்கோ இருக்கும் புலம்சின் சில எம்பி சீட்டுக்களுக்க்காக் பலி கொடுக்க துடிக்கும் கயவர்கள் ..
இலங்கையே தெரியாத இந்தியரகளை கொண்டு போய் இலங்கையில் கொட்டுவது என்ன மனிதாபிமானம்?
இன்னும் புலம் வாயே திறக்கவில்லை .. போரிகுற்றத்தை விட புலம்சின் இந்த கள்ள மௌனம் கேவலமான குற்றம்

கருத்துகள் இல்லை: