சனி, 21 டிசம்பர், 2019

அமெரிக்க எம்பி பிரமிளா ஜெயபாலை சந்திக்க அமைச்சர் ஜெயசங்கர் தயங்கி பின்வாங்கியது ஏன்?

Pramila Jayapal Rep Washington
Indian officials informed the committee that Jaishankar would not meet with the lawmakers if the group included Jayapal, who is sponsoring a resolution urging India to lift communications restrictions, restore the Internet and preserve religious freedom. Engel refused, and the Indians pulled out, Jayapal told The Washington Post.
Jayapal told The Washington Post. “This only furthers the idea that the Indian government isn’t willing to listen to any dissent at all,” she said. “The seriousness of this moment should’ve been a reason for a conversation, not dictating who’s in the meeting, which seems very petty.”
காஷ்மீர் பிரச்சனை மற்றும் புதிய இந்திய குடியுரிமை சட்டம் பற்றி எல்லாம் அமெரிக்காவுக்கு வகுப்பெடுக்க சென்ற இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுவரில் அடித்த பந்து போல திரும்பி வந்துள்ளார்.
அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்து காஷ்மீர் மற்றும் இன்றய குடியுரிமை சட்டமும் அதனால் உருவான குழப்பங்கள் பற்றி எல்லாம் விளக்க சென்றார்.
ஆனால் ஜெய்சங்கருக்கு  விளக்கம் கொடுக்க கூடிய அளவு தெளிவோடு அவர்கள் உள்ளார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியோடு திரும்பி விட்டார். அமெரிக்க பிரதிநிதி பிரமிளா ஜெயபால் அவர்கள் காஷ்மீர் விவகாரம் கவலை அளிப்பதாக கருத்து கூறியுள்ளார் .
 ( பிரமிளா அவரகள் சென்னையில் பிறந்தவர் வளர்ந்தவர் பார்ப்பனர் அல்லாதவர் ...ஒரு பச்சை திராவிடர்)  

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கி குரல் கொடுப்பவர் அதனாலேயே பெரிதும் கருப்பு இனக்களின் வாக்குகளால் தெரிவானவர
ஜெய்சங்கர் சந்திக்க இருக்கும் அமெரிக்கக் பிரதிநிதிகள் குழுவில் பிரமிளாவும் இதர வேறு சில உறுப்பினர்களும் கலந்து கொள்ள கூடாது என்று முன் நிபந்தனை விதித்தார் . பிரமிளா ஜெயபாலை பார்த்து அவ்வளவு பயம்?
பிரமிளா ஏற்கனவே காஷ்மீருக்காக ஓங்கி குரல் கொடுத்துள்ளார்.
அவர் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கமே நின்றுள்ளார்.
பாஜக / ஆர் எஸ் எஸ்  வித்தை ஒன்றும் அவரிடம் பலிக்காது என்று தெரிந்து கொண்டேதான் சந்திப்பதை திடீர் என்று கைவிட்டு இந்தியா திரும்பி உள்ளார்..
முடிவு தெரிந்து விட்டது இனி பிரமிளாவை வேறு சந்தித்து அர்ச்சனை வேறு பெற்று கொள்ள வேண்டுமா என்ன?
பிரமிளாவின் தாய் மாயா ஜெயபால் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் .

அவரின் பேட்டி காணொளியை இங்கு இணைத்துள்ளேன் .

கருத்துகள் இல்லை: