சனி, 14 டிசம்பர், 2019

தமிழ்நாட்டில் உள்ள வெளி மாநிலத்தவர் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்...:பெ.மணியரசன் பேட்டி

தினகரன் :  தஞ்சை: டிசம்பர் 20ல் பிரமாநிலத்தவரை வெளியேற கூறி போராட்டம் நடத்தப்போவதாக பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,தமிழர்களை புறக்கணிக்கக்கூடிய நிறுவனங்களை நாம் புறக்கணிக்க வேண்டும். பிறமாநிலத்தவர்களுடன் ஒத்துழையாமை இயக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் எவ்வளவு வெளிமாநிலத்தவர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும். 1956க்கு பிறகு தமிழகத்துக்கு வந்தவர்களை வெளியார் என அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: