திங்கள், 9 டிசம்பர், 2019

8 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கு பயந்து மாணவரகள் drop out.. குலக்கல்வியை கொண்டுவந்த எடப்பாடி அரசு

Sivaprakash Palanichamy : எனது சகோதரி வேலை செய்யும் அரசுப்பள்ளியில் போன மாதம் படித்துக்கொண்டிருந்த 8 ம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 5 ம் மற்றும் 8 ம் வகுப்புக்கு பொது தேர்வு அறிவித்த அடுத்த வாரத்திலிருந்து 8 மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை, பெற்றோர்களிடத்தில் கேட்டால் அவர்களுக்கு தேர்வை நினைத்து பயமாக இருப்பதாகவும் இனிமேல் பள்ளிக்கு வரமாட்டார்கள் என்று சொல்லி விட்டார்கள்.
இவர்களால் இனிமேல் ஒரு வாகனம் ஓட்டி பிழைப்பதற்குக் கூட லைசென்ஸ் வாங்க முடியாது
மனுதர்மக் கொள்கையை கொண்டு வரும் சங்கிகளுக்கும் ஆதரிக்கும் அடிமை அரசுக்கும் வித்தியாசம் இல்லை.
இதனால் இத்துணை காலம் பாதுகாத்து வந்த கல்வி கொள்கைகளும் வளர்ச்சிகளும் முடங்கித்தான் போகும்.
இதற்காக, இந்த முடிவை மாற்ற பெரிய அளவில் போராட்டம் தேவை. அதை தி மு க செய்ய வேண்டும்
இதற்காக என்னால் கட்சித் தலைமையை அனுக முடியுமா என்று தெரியவில்லை அதனால் நண்பர்களை tag செய்துள்ளேன். மன்னிக்கவும்
Devi Somasundaram : கோபம் வருது ..அரும்பாடுபட்டு நம் தலைவர்கள் நமக்கு மீட்டு தந்த உரிமைக்ளை சுயலாபத்துகாக கைவிட்டு ஒரு சமுகத்தின் அடிப்படை வாழ்வியலை அழிக்கும் இந்த ஆட்சியாளர் மேல் அத்தனை கோபம் வருது .இப்பவும் திமுக என்ன செய்துச்சு டோலி வரப் போகும் ஆட்களை பார்த்து பரிதாபப் படுவதை தவிர எதும் செய்வதற்கில்லை ..
Dev JB அப்படி drop out ஆகும் எல்லோரையும் ஜாதி,மதம் பேர சொல்லி RSS வசப்படுத்தும். ஆதிக்கவாதிகள் வீட்டில் போய் முறை வாசல் செய்யனும். விவசாய, கட்டுமான கூலிகளாக அடுத்த 5 வருடத்தில் ஆட்கள் கிடைப்பார்கள்.

கருத்துகள் இல்லை: