வியாழன், 12 டிசம்பர், 2019

ஹிட்லரின் ஜெர்மனி : வரலாற்றில் இருந்து பாடம் கற்க தவறினால் வரலாறு உங்களுக்கு பாடம் கற்பிக்கும்

Karthikeyan Fastura : ஹிட்லர் ஜெர்மனியை ஆட்சி செய்தபோது அவர் கைக் கண்டு அஞ்சினர், வெறுத்தனர், சிலர் போர்க்கொடி பிடித்தனர். அவ்வாறு போர்க்கொடி பிடித்தவர்களை துரோகிகள் என்று தம்மவர்களையே கொலை செய்யத் தொடங்கினார்.
செய்ததெல்லாம் சரி என்று சொல்ல மக்களின் பெரும் கூட்டம் இருந்தது. அதனால் அவர் நன்றாக சென்று கொண்டிருந்த ஜெர்மனியின் பொருளாதாரம் வேகத்தை
மட்டுப்படுத்துவதோடு கூடவே அண்டை நாடுகளின் மீது தாக்குதலை தொடங்க ஆரம்பித்தார். அந்த தாக்குதலானது வெறும் போராக மட்டுமில்லாமல் யூதர்களின் இன அழிப்பில் கொண்டு சேர்த்தது. அது தீராத களங்கத்தை ஜெர்மனிக்கு அதன் வாழ்நாள் முழுக்க கொடுத்துக் கொண்டே இருக்கிறது. முதலில் ஆதரவளித்த தலைவர்களும் மக்களும் கூட ஹிட்லரின் போக்
பிறகு உலக நாடுகள் அவர்மீது பதில் தாக்குதல் நிகழ்த்தி நெருக்கடி கொடுத்து இறுதியில் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு நாசி என்ற சித்தாந்தமே படு பாதகமான, எல்லோரையும் அழிக்கக்கூடிய ஒரு சிந்தனை வாதம் என்று ஜெர்மனிய மக்களால் ஒதுக்கப்பட்டது. முற்றிலுமாக கைவிடப்பட்டது.

பாஜக அரசும் அதன் பாதையும் செல்லும் பாதையானது ஹிட்லரும் அவரது நாசி படைகளும் சென்ற பாதையைத்தான் காட்டுகிறது. ஹிட்லர் ஆட்சி செய்ததால் இன்று ஜெர்மனி முற்றிலும் அழிந்து விடவில்லை. அதன் மக்கள் அழிந்து விடவில்லை. ஆனால் நாசிசம் முற்றிலுமாக அழிந்துவிட்டது. பயங்கரவாதமாக உலக மக்களால் பார்க்கப்படுகிறது. ஹிட்லர் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் இன்றும் பயங்கரவாதிகளாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளனர்.
இதேபோலவே பாஜகவும் அதன் ஆட்சியாளர்களும் எதிர்காலத்தில் அழிவார்கள் ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் இருந்த ஜெர்மனி எப்படி உடைந்ததோ அதுபோல உடையலாம் ஒழிய இந்திய தீபகற்பமும் அதன் இறையாண்மையும் அழியப் போவதில்லை.
வரலாற்றில் இருந்து நீங்கள் பாடம் கற்க தவறினால் வரலாறு உங்களுக்கு பாடம் கற்பிக்க தவறாது.

கருத்துகள் இல்லை: