வியாழன், 12 டிசம்பர், 2019

குடியுரிமை சட்ட வரைவுக்கு எதிராக டிசம்பர் 17-ல் திமுக போராட்டம்

மாலைமலர் :பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட
குடியுரிமை மசோதாவுக்கு எதிராக
டிசம்பர் 17-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.  சென்னை: பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நேற்று நிறைவேறியது. இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு நிலவிவருகிறது. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17-ம் தேதி மாவட்டம் தோறும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்த பா.ஜ.க.- அ.தி.மு.க.வை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: