செவ்வாய், 10 டிசம்பர், 2019

தயாநிதி மாறன் வீடியோ ... புதிய குடியுரிமை சட்டம்... முஸ்லிம்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் ஓரவஞ்சனை ..


ஆலஞ்சியார் :  புதிய குடியுரிமை சட்டம் .. பிற நாடுகளில் இருந்து வரும் சீக்கியர்கள்
இந்துக்கள் பார்சிகள் இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் முஸ்லிம்களுக்கு இலங்கை தமிழர்களுக்கு வழங்கபடாது ..
முஸ்லிம்களுக்கு வழங்கபடாதது குறித்து நாம் அறிந்தது தான் அதை வைத்துதானே அரசியல் இல்லையென்றால் பாஜக ஏது ..
ஆனால் இலங்கை தமிழர்களுக்கு மறுக்கபட்டிருப்பதை தமிழகத்தை ஆளும் அதிமுக வரவேற்றிருக்கிறது .. தமிழ் தேசிய ஜாதியினர் மௌனம் காக்கிறார்கள் .. நாடாளுமன்றத்தில் டி ஆர்.பாலுவும் தயாநிதியும் அமித்ஷாவை கிழித்தெறிகிறார்கள்.. இலங்கை தமிழர்களுக்கு திமுக துரோகம் செய்ததாக தினமொரு கதைச்சொல்லும் மூடர்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும் ஈழத்தை வைத்து அரசியல் செய்வது திமுகவின் வேலையில்லை அப்படி செய்யவேண்டுமென்றால் .. நெடுமாறன் உள்ளிட்டவர்கள் எப்போதே காணாமல் போயிருப்பர் அரைவேக்காட்டுத்தனமான மசோதா இது அதை எதிர்க்கிறோம் .. இலங்கை தமிழர்கள் முஸ்லிம்கள்

இவர்களுக்கும் குடியுரிமை வழங்கும் சரத்து சேர்க்கபடவேண்டும் ..அவைத்தலைவர் மறுத்ததால் வெளிநடப்பு செய்தது .. ஒரு மதத்தவரை முற்றிலுமாக புறக்கணித்து ..சரியான காரணம் இருந்தும் அவர்களுக்கு மறுக்கபடுவது இந்த அரசின் சர்வாதிகாரத்தை மிருகபலம் இருக்கிறதென்பதற்காக எதையும் செய்யலாமென்ற திமிரில் ஆள்வோர் நடப்பது மிகப்பெரிய அழிவை தரும் ..
குடியுரிமை மசோதா திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை பெற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஏனென்றால் மற்ற நாடுகளில் உள்ள ஏனைய மக்கள் அரசுகளால் சித்திரவதை செய்யப்பட்டார்கள். ஆனால் இலங்கை தமிழர்கள் அரசுடன் மோதல் போக்கை மேற்கொண்டார்கள் . மோதலுக்கும் சித்ரவதைக்கும் மிகப் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது என்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.. இலங்கை விடுதலை போரில் இருதரப்பிற்கும் பயந்து நாடுவிட்டவர்கள் அவர்கள் அரசிற்கெதிராக மோதலை தொடுத்தவர்கள் இல்லை .. ஆனால் அரசால் சித்தரவதை செய்யபடுபவர்கள் என்ற "சொற்சொடர் " மிக கவனமாக கையாளபட்டிருக்கிறது .. இந்திய மண்ணில் அரசால் தினம் தினம் சித்தரவதை செய்யபடுவோருக்கு இந்த அரசு எதை செய்ய போகிறது ..
..
இலங்கை தமிழர்களுக்கு மறுக்கபட்டதை கூட எதிர்க்க துணிவில்லாத "ஈழத்தாயின்" பிள்ளைகளை தமிழகம் கொண்டாட வேண்டும் .. பிரபாகரனை அழைத்துவந்து தூக்கிலிட வேண்டுமென்றவரை .. ஈழத்தாயாக பேசி வயிறு வளர்த்த சீமான்களும் நெடுமரங்களும் தான் ஈழக்காவலர்கள் ..ஈழ அரசியலை வைத்து பிழைப்பவர்கள் இதிலாவது ஏதாவது போராட்டம் ...? செய்வார்களா பாவம்
களி திங்க தயாரில்லை ..
..
திமுக எப்போதும் போல் இயங்கிக்கொண்டிருக்கிறது இந்த பாசிச அரசிக்கெதிராய்..
திமுக என்றால் அஞ்சாமை ..
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை: