ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

நாங்குநேரி , விக்கிரவாண்டி கடந்த தேர்தல்களில் கட்சிகள் பெற்ற வாக்குகள் ..ஒரு அலசல்

Chozha Rajan : இடைத்தேர்தலில் திமுகவுக்கு வாய்ப்பு இருக்கிறதா?
2016 சட்டப்பேரவை தேர்தலில் நாங்குனேரி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் 74,932 வாக்குகளையும், அதிமுக சார்பில் போட்டியிட்ட 57,617 வாக்குகளையும், அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் போட்டியிட்ட சுரேஷ் அலி 14,203 வாக்குகளையும், ம.ந.கூ. சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் ஜெயபாலன் 9,446 வாக்குகளையும், பாஜக சார்பில் தனித்து போட்டியிட்ட 6,609 வாக்குகளையும் பெற்றனர்.
அதாவது பொதுத்தேர்தலுடன் நடந்த தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு இது. ஆனால், இப்போது நடக்கப்போவது இடைத்தேர்தல் என்பதை கவனிக்க வேண்டும்.
அதுபோலவே, 2016 பேரவைப் பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் 63,757 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் 56,845 வாக்குகளையும், பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணி 41,428 வாக்குளையும், ம.ந.கூ. சார்பில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் 9,981 வாக்குகளையும் பெற்றனர். பாஜக தனித்து போட்டியிட்டு 1,291 வாக்குகளை மட்டுமே பெற்றது.
இதுவும் பொதுத்தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் என்பதையும், இப்போது நடக்கப்போவது இடைத்தேர்தல் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மக்களவைப் பொதுத்தேர்தலின்போது உருவான திமுக மற்றும் அதிமுக கூட்டணி அப்படியே இருக்கிறது. ஆனால், அதிமுக கூட்டணிக்கட்சிகளின் திமுக எதிர்ப்பு கடுமை மாறாமல் அப்படியே இருக்கிறது. ஆனால், திமுக கூட்டணியிலோ, மக்களவைத் தேர்தலின்போது இருந்த பாஜக, அதிமுக எதிர்ப்பின் கடுமை வெகுவாகக் குறைந்திருக்கிறது என்ற விமர்சனம் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் மத்தியிலேயே உருவாகி இருக்கிறது.

கருத்துகள் இல்லை: