செவ்வாய், 23 ஏப்ரல், 2019

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு; ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு; ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்புதினத்தந்தி :இலங்கையின் கொழும்பு நகரில் கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்தனர்.  இந்நிலையில், கொழும்பு நகரின் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நேற்று முன்தினம் காலை 8.45 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  இதேபோன்று மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீதும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம் என 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன.
இதேபோன்று ஷாங்க்ரிலா, சின்னமன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய மூன்று 5 நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்பின் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில், கொழும்பு புறநகரில் மிருகக்காட்சி சாலைக்கு அருகே ஒரு குண்டு வெடித்தது. அதில் 2 பேர் பலியானார்கள். கொழும்பு புறநகரான உருகொடவட்டாவில் ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்த நுழைந்தபோது, உள்ளே இருந்தவன் மனித வெடிகுண்டாக மாறி, குண்டு வெடிக்க செய்தான். இதில் 3 போலீசார் பலியானார்கள்.  இதனால் மொத்தம் 8 இடங்களில் குண்டு வெடிப்புகள் நடந்து இருந்தன.


இந்த நிலையில், வேனில் இருந்த வெடிகுண்டு ஒன்றை செயலிழக்க செய்யும் முயற்சியில் போலீசார் நேற்று ஈடுபட்டு இருந்தனர்.  ஆனால் இந்த முயற்சியில் வெடிகுண்டு திடீரென வெடித்தது.  இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.  இதனால் கொழும்பு நகரில் மொத்தம் 9 குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்துள்ளன.  இதுவரை 310க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல்களுக்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.  இந்நிலையில், இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இன்று பொறுப்பேற்றுள்ளது

கருத்துகள் இல்லை: