செவ்வாய், 23 ஏப்ரல், 2019

இலங்கை குண்டு தாக்குதலில் 8 இந்தியர்கள் உட்பட 290 பேர் ..அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, வங்காளதேசம் ஆகிய


மாலைமலர் ; இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நிகழந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த 290 பேரில் 8 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.
கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியானது. இந்தியாவை சேர்ந்த லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று தெரிவித்திருந்தார்.
இலங்கை குண்டுவெடிப்புகளில் மேலும் 4 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், அவர்கள் பெயர் வேமுராய் துளசிராம், எஸ்.ஆர். நாகராஜ், கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா என்றும் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் இன்று தெரிவித்தது. இந்நிலையில்,
இதுவரை 8 இந்தியர்கள் குண்டுவெடிப்பில் பலியானதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் இன்று மாலை தெரிவித்துள்ளது.
ஹெச்.சிவக்குமார் என்ற இந்தியரும் குண்டுவெடிப்பில் உயிரிழந்ததாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதற்கிடையில், கேரள மாநிலத்தை சேர்ந்த ரசினா என்பவரும் இந்த குண்டுவெடிப்பிப் பலியானதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் நேற்று தெரிவித்திருந்தார். இந்த தகவல் இந்திய அரசின் சார்பில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கருத்துகள் இல்லை: