ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

தேவாலயங்களுடன் ‘5 ஸ்டார்’ ஓட்டல்களையும் குறிவைத்து தாக்குதல்

தேவாலயங்களுடன் ‘5 ஸ்டார்’ ஓட்டல்களையும் குறிவைத்து தாக்குதல்மாலைமலர் : இலங்கையில் இன்று நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலில் மூன்று ஐந்து நட்சத்திர ஓட்டல்களும் குறிவைக்கப்பட்டுள்ளன #Srilanka சினமான் கிராண்ட் ஹோட்டல் (கோப்புப்படம்) உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் கிறிஸ்தவர்கள் தேவாலயங்கள் சென்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தேவாலயங்கள் சென்று பிராத்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று இலங்கையில் காலை 8 மணி முதல் கிறிஸ்தவர்களை குறிவைத்து தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று தேவாலயங்களை தவிர்த்து மூன்று நட்சத்திர ஓட்டல்களும் குறிவைக்கப்பட்டுள்ளன. ஷங்க்ரி லா, சின்னமோன் கிராண்ட் ஓட்டல் மற்றும் கிங்ஸ்பர்ரி ஆகிய ஓட்டல்களிலும் குண்டு வெடித்துள்ளன. இதனால் 280-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் உயிர்ப்பலி அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது

கருத்துகள் இல்லை: