
vikatan.com- -antonyraj. எல்.ராஜேந்திரன் : தூத்துக்குடியில்
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ள
விவகாரம் பற்றியெரிகிறது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைத் தரப்பிடமிருந்து
சீமான் தரப்புக்குப் பணம் தரப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தை நாம்
தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அ.வியனரசு எழுப்பியிருக்கிறார்.
இதுதொடர்பாக, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு அவர் விரிவான
கடிதம் எழுதியிருக்கிறார்.
குற்றம்சாட்டும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்
சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றக் கோரி சென்னை
சேப்பாக்கத்தில் மக்கள் நீதிக் கொற்றம் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டத்தை
ஒருங்கிணைத்து நடத்தினார் ‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளரான
அ.வியனரசு. அதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்,
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட பலரும்
அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், சீமான் புறக்கணிக்கப்பட்டிருந்தார். இந்த
நிலையில்தான், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பி
ஒன்பது பக்கங்கள் கொண்ட கடிதத்தை சீமானுக்கு வியனரசு அனுப்பியுள்ள விவரம்
தெரியவந்தது.இந்த நிலையில், மே 22-ம் தேதி மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் நானும் நம் கட்சியினர் 13 பேரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டோம். சட்ட வல்லுநர்களால் கட்டமைக்கப்பட்ட நமது கட்சியில், எங்களை விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஏன் தம்பி? மன்சூர் அலிகான் சிறைப்பட்டபோது நம் சட்ட அறிஞர்கள் காட்டிய அக்கறையில் சிறிதளவுகூட எங்களிடம் காட்டாததற்குக் காரணம், ஏழை என்பதாலா அல்லது சாதி அடிப்படையிலான பாகுபாடா? எனக்குப் பிணை கிடைப்பதற்குக்கூட நம் வழக்கறிஞர்கள் உதவி செய்யாததால், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதனின் உதவியை நாடியதை நீங்கள் அறிவீர்களா? மே 22 துப்பாக்கிச்சூடு நடந்த பின்னர், நீங்கள் இரண்டு முறை தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தீர்கள். அப்போதும் ஊருக்குள் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காமல் சென்றது ஏன்? மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ரகசியமாக வந்த நடிகர் விஜய் என்று பலரும், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த நிலையில், நீங்கள் மட்டும் வராமல் இருக்கக் காரணம் என்ன?
அ.வியனரசுவிடம் பேசினோம். “நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகியின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சீமான் தரப்புக்குப் பெரும் தொகை கைமாறியிருப்பதாகப் பேசப்படுகிறது. அதன் காரணமாகவே சீமான், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க வரவில்லை என்றும் பேசுகிறார்கள். இத்தகைய குற்றச்சாட்டு ஒரு கட்சியை வலுவிழக்கச் செய்துவிடும் என்பதாலேயே சீமானுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை” என்றார்.
இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக, கடந்த ஒரு வாரமாக சீமானைத் தொடர்புகொள்ள தொடர்ந்து முயற்சி செய்தோம். பலமுறை அழைத்தும் அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. குறுந்தகவல் அனுப்பியும் பதில் வரவில்லை. அவரின் உதவியாளர் பாக்கியராசன் என்பவரிடம் தகவல் சொல்லியும் பதில் இல்லை. சீமானுக்கு இதுதொடர்பாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அவர் விளக்கம் அளித்தால் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.
- பி.ஆண்டனிராஜ்
படம்: எல்.ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக