வியாழன், 3 ஜனவரி, 2019

சரவண பவன், அஞ்சப்பர் உட்பட 32 இடங்களில் வருமானவரி அதிரடி சோதனை ..சென்னையில் ..

Income tax raids on premises of Hotel Saravana bhavan, Anjappar tamil.oneindia.com- veerakumaran.: சென்னை: சென்னையில், ஹோட்டல் சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட பிரபல உணவகங்களின் தலைமையகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.
ஹோட்டல் சரவணபவன், கிராண்ட் ஸ்வீட்ஸ், அஞ்சப்பர், ஹாட்பிரெட் போன்ற உணவகங்கள், இனிப்பகங்கள் உட்பட தமிழகம் முழுக்க 32 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். காலை 8 மணி முதல் ரெய்டு நடக்கிறது. 100 மேலான அதிகாரிகள் இந்த சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த உணவகங்களின் தலைமை அலுவலகம், கார்பொரேட் அலுவலகங்களில்தான் ரெய்டு நடப்பதால், இந்த உணவகங்கள், இனிப்பகங்களின் பிற கிளைகளில், வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களின், தலைமை அலுவலகங்கள் மட்டுமின்றி, மேலாளர்கள் வீடுகளிலும் ரெய்டு நடக்கிறது. வரி ஏய்ப்பு தொடர்பான தகவல்கள் அடிப்படையில் ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது.
இந்த ரெய்டு நாளையும் தொடர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை: