வியாழன், 3 ஜனவரி, 2019

கலைஞருக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கலைஞருக்கு இரங்கல் தீர்மானம்: நெஞ்சம் நெகிழ்ந்தது. அனைவருக்கும் நன்றி -ஸ்டாலின்
NDTV : கலைஞருக்கு இரங்கல்
தீர்மானம்: நெஞ்சம் நெகிழ்ந்தது. அனைவருக்கும் நன்றி -ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று(புதன்கிழமை) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. வரும் 8 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) வரை கூட்டம் நடைபெறும். தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று(புதன்கிழமை) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. வரும் 8 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) வரை கூட்டம் நடைபெறும்.
இன்று இரண்டாவது நாளாக தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ. போஸ் மறைவுக்காக இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்பொழுது தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் திமுக எம்.எல்.ஏ. போன்றோர் இரங்கல் தீர்மானம் வாசித்தனர்.

இன்று தமிழக சட்டப்பேரவையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுக்குறித்து தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியாதவது:-
"வாழ்ந்த நாள்களில் பாதி நாள்களுக்கும்மேல், சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த நம் தலைவர் கலைஞருக்கு இன்று பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டிய நம் தலைவரின் பெருமைகளை உறுப்பினர்கள் பேசியபோது நெஞ்சம் நெகிழ்ந்தது. அனைவருக்கும் என் நன்றி"

கருத்துகள் இல்லை: