புதன், 15 நவம்பர், 2017

ரயிலில் சமோசா திருடிய பாஜக மாணவர் அணியினர் !

Babu che : இரயிலில் சமோசா திருடிய பாஜக மாணவர் அமைப்பினர்.
நேற்று ஹைதராபாத்திலிருந்து கொச்சுவேலி செல்லும் இரயிலில் திருப்பூரிலிருநது் ஏறிய போது அந்த இரயில் முழுக்கவே இளைஞர்கள் மாணவர்கள் நிரம்பியிருந்தனர். எங்கே செல்கிறீர்களென்று விசாரித்த போது தாங்கள் பாஜகவின் மாணவர் அமைப்பான ABVPயினர் என்றும், திருவனந்தபுரத்தில் கேரள அரசைக் கண்டித்து நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கேரளா விற்கு செல்வதாகவும் பெருமையாக கூறினர்.
தொடர்ந்து இரயிலில் சமோசா விற்பதற்காக ஒரு வியாபாரி சமோசா குண்டாவை தலையில் சுமந்தவாறு வந்தார். Upper birthல் இருந்த சங்கிகள் மேலிருந்து சமோசாக்களை அள்ளி பையில் வைத்துக்கொண்டனர். இதை கவனித்த தோழர்கள் அவர்களை எச்சரித்து அதற்குரிய பணத்தை பெற்றுக் கொடுத்தார்கள். இதை கவனித்ததும் இவர்களின் கோவை சகாக்களின் வீர வரலாறு பிரியாணி அண்டா திருட்டும், மொபைல் திருட்டும் நினைவுக்கு வந்தது. தலைவன் முதல் தொண்டன் வரை எளிய மக்களை சுரண்டுவதையே பிழைப்பாக வைத்திருக்கிறார்களே என்று நொந்து கொண்டிருக்க பாரத் மாதா கீ.. ஜே.. என்ற கோஷம் காதைப் பிளக்க இரயில் கோவை வந்தடைந்தது.
இறங்கும் முன் பாக்கெட்டில் பணம், மொபைல் போன்கள் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு இறங்கினோம்.

கருத்துகள் இல்லை: