வெள்ளி, 17 நவம்பர், 2017

பார்ப்பனர்களுக்குதான் இயல் இசை நாடகம் எல்லாம் இருக்கும் .. அப்படீன்னு ஒரு காலம் இருந்துச்சி ?

மார்ட்டின் சந்தர் கிங் : பார்ப்பனர்களுக்குதான் அறிவு இருக்கும் என்றொரு பொதுபுத்தி நீண்டகாலமாகவே தமிழகத்தில் நிலவி வருகிறது. நடிகர் விவேக் புத்திசாலி என்பதால் (!) அவர் பார்ப்பனராகதான் இருக்க வேண்டும் என்று தான் கருதியதாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தேகூட ஒருமுறை மேடையில் பேசியிருக்கிறார்.
பார்ப்பனர்களுக்கு அறிவு இருக்கும் என்கிற அந்த பிம்பம் சமீபவருடங்களாக - குறிப்பாக பிஜேபி ஆட்சிக்கு வந்தபிறகு - உடையத் தொடங்கி இருப்பது ஒரு நல்ல சமூக முன்னேற்ற நிகழ்வு. Demonetisation மற்றும் GST தொடர்பான மத்திய அரசின் முட்டாள்தனமான நடவடிக்கைகளில் முட்டுக் கொடுத்து தங்களுக்கு சராசரி அறிவு கூட இல்லை என்பதை ஐயமற நிரூபித்திருக்கிறார்கள்.
‘அய்யிரு சொன்னா சரியாதானிருக்கும்’ என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்தவர்கள் கூட ஏடிஎம் க்யூக்களில் மணிக்கணக்காக நின்றது, வங்கி வங்கியாக போய் பிச்சையெடுத்தது, நூறு ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு நூற்றி முப்பது ரூபாய் பில் செலுத்துவது என்று நாய்படாத பாடு பட்ட அனுபவங்களால் தங்கள் மனப்பதிவை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக ரங்கராஜ் பாண்டேவை ப.சிதம்பரம் வறுத்தெடுத்த பிற்பாடு ‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ என்று அலைகிறார்கள் பார்ப்பனர்கள். வெறும் வாய் உதார் வைத்தே இதுவரை ஏரோப்ளேன் ஓட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு வருங்காலம் போதாத காலமாக இருக்கப் போவது உறுதி. இதை செய்வதற்காகதான் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக திராவிட இயக்கமே தோன்றியது. அந்த இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிற ஆசுவாசம் ஏற்படுகிறது.

கருத்துகள் இல்லை: