வெள்ளி, 30 ஜூன், 2017

இரசாயன பால் அல்லது கலப்பட பால்: ..ஹைட்ராக்ஸைடு, அமோனியா, யூரியா, சோடியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன் ட்ரை ஆக்ஸைடு

பாதி கலப்பட பால்:
பாதி அளவு இயற்கை பாலுடன் இன்ன பிற பொருட்கள் சேர்த்து யம் ஹைட்ராக்ஸைடு, அமோனியா, யூரியா, சோடியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன் ட்ரை ஆக்ஸைடு இவற்றில் ஒன்றை சேர்க்கிறார்கள்.
தயாரிக்கப்படுவது கலப்பட பால். கொள்முதல் செய்யப்படும் பாலிலிருந்து பிற பால் பொருட்களை உற்பத்தி செய்ய கொழுப்பை நீக்குகிறார்கள். மீண்டும் பாலின் அடர்த்தி மற்றும் புரதத்தை அதிகரிக்க விலங்குகளின் கொழுப்பு அல்லது கொழுப்பு பவுடர் சேர்க்கிறார்கள். சில சமயம் பாலின் அடர்த்தியை அதிகரிக்க மைதா மாவு, ஜவ்வரிசி மாவு, ஸ்டார்ச், மரவள்ளிக் கிழங்கு மாவு சேர்க்கிறார்கள். இவ்வாறு சேர்க்கப்படும்போது பால் கெடாமல் இருக்க பொட்டாசி
ரசாயன சிந்தட்டிக் பால்!

மூன்று மாதங்கள் வரை கெட்டுப்போகாத சிந்தட்டிக் பால் உற்பத்தியும் இங்கே நடக்கிறது. இதை உற்பத்தி செய்ய மாடு தேவையில்லை. ரசாயனப் பொருட்கள் போதும். காஸ்டிக் சோடா, யூரியா, டிடர்ஜெண்ட் தூள், ஷாம்பூ ஆகியவற்றை கலந்து வாஷிங்மெஷின் போன்ற எந்திரத்தில் சுழல விடுகிறார்கள். இதனுடன் கொழுப்புச் சத்துக்காக தாவர எண்ணெய்யும், அடர்த்திக்காக மரவள்ளிக் கிழங்கு மாவு, இனிப்புக்காக சர்க்கரை அல்லது சாக்ரீம் சேர்த்து சுமார் ஒரு மணி நேரத்தில் செயற்கை பாலை தயாரித்துவிடுகிறார்கள்.
இதில் கலக்கப்படும் காஸ்டிக் சோடாவானது பாலை கெடாமல் பாதுகாக்கிறது. டிடர்ஜெண்ட் தூள் தாவர எண்ணெய்யை தண்ணீரில் கரையச் செய்கிறது. யூரியா கொழுப்பு அல்லாத பிற சத்துக்களை கூடுதலாக காட்ட உதவுகிறது. டெல்லியில் மட்டும் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் சிந்தட்டிக் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதுகுறித்து ஆய்வுகள் இதுவரை நடக்கவில்லை. அதற்கான தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் புள்ளிவிபரத்தின்படி ஒடிசா, பிஹார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சந்தைக்கு வரும் பாலில் 100 சதவீதமும் செயற்கை பால்தான். குஜராத்தில் 89 %, பஞ்சாப்பில் 81 %, ராஜஸ்தான் 76 %, டெல்லி 70 %, மகாராஷ்டிரம் 65 % செயற்கைப் பால் சந்தைப் புழக்கத்தில் இருக்கிறது
- @sanjeevi Kumar, #TamilTheHindu June22

கருத்துகள் இல்லை: