சனி, 3 ஜூன், 2017

தினகரன: சென்னை திரும்பியதும் கட்சி பணியாற்றுவேன் .

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்றுள்ள டிடிவி.தினகரன் சென்னை திரும்பும் வழியில் டில்லி விமான நிலையத்தில் மீடியா நிருபர்களை சந்தித்தார். அவர் கூறும்போது, என்னை கட்சியில் இருந்து யாரும் நீக்க முடியாது. நான் தான் அதிமுகவின் துணை பொதுச் செயலாளர். பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்டவன். சென்னை திரும்பியதும் கட்சிப்பணிகளில் என்னை மீண்டும் ஈடுபடுத்திக்கொள்வேன். எனக்கென்று கட்சியில் தொண்டர்கள் உள்ளனர். தொண்டர்களுக்காக நான் கட்சிப்பணி செய்தே ஆக வேண்டும் என்று கூறினார். ஆனால், தான் கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பேன். அதிமுக அழிந்து போய்விடக்கூடாது என்றெல்லாம் பேசிய தினகரன் தற்போது இப்படி மாறியதற்கு இரண்டு தூண்கள் தாங்கிப்பிடித்திருப்பதால் வந்திருக்கும் தைரியம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

அதாவது நாஞ்சில் சம்பத் மற்றும் புகழேந்தி ஆகியோரின் தூண்டுதல் பேரிலேயே அவர் இப்படி நடந்து கொள்கிறார். ஆனால், அவர்கள் சொல்லும் அளவுக்கெல்லாம் களத்தில் தினகரனுக்கு பெரிய செல்வாக்கும் இல்லை. மேலும் நாஞ்சில் சம்பத்தை நன்கு அறிந்தவர்கள் அவரை துளியும் நம்பமாட்டார்கள்.

அவர் வாய் சவடாலில் மட்டுமே காரியம் சாதிப்பார். கிட்டத்தட்ட புகழேந்தியும் அதைத்தான் செய்து வருகிறார் என்கிறார்கள், அதிமுகவின் விசுவாசிகளே. தினகரன் கட்சி விஷயங்களில் தலையிட்டால் மீண்டும் பிரச்னைகள் வெடிக்கும். அது அதிமுக ஆட்சிக்கு வைக்கப்படும் வேட்டாகவே அமையும் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். ஏற்கனவே தினகரன் சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொண்டார். மீண்டும் அதையே அவர் செய்ய நினைப்பது உடைந்த மரக்கிளையில் அமர்ந்துகொண்டு கிளையை அறுப்பதற்கு சமம் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்..என்னதான் நடக்கிறதென்று..?! லைவ்டே

கருத்துகள் இல்லை: