ஞாயிறு, 25 ஜனவரி, 2015

வி எஸ்.ராகவன் காலமானார்.பழம்பெரும் நடிகரும் சிறந்த டைரக்டருமாவார்

பழம்பெரும் திரைப்பட நடிகர் டைரக்டர் வி.எஸ்.ராகவன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90. உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். 1925ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம், வெம்பாக்கத்தில் பிறந்தவர் வி.எஸ்.ராகவன். ஆரம்ப காலங்களில் பத்திரிக்கை ஒன்றில் பணியாற்றி வந்தார். நடிப்பு மீது கொண்ட ஆர்வத்தால், நாடகங்களில் நடித்து வந்த அவர், பின்னர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் தோன்றி புகழ் பெற்றார். 1954ல் வைரமாலை என்ற திரைப்படத்தில் அறிமுகமான அவர், ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமின்றி, சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். ஆல் இன் ஆல் அழகுராஜா, கலகலப்பு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சாகும் வரையிலும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே வி.எஸ்.ராகவனின் ஆசையாக இருந்தது. இவர் கடைசியாக நடித்த காத்தாடி திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில், உடல் நலக்குறைவால் வி.எஸ்.ராகவன் காலமானார். வி.எஸ்.ராகவன் இல்லம் மந்தைவெளி ராமகிருஷ்ணா நகரில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை பெசன்ட் நகர் மயானத்தில் அவரின் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளதுnakkheeran.in

கருத்துகள் இல்லை: