சனி, 31 ஜனவரி, 2015

இளங்கோவன் மீது அதிருப்தியில் சோனியா ! சிதம்பரத்தை வெளியேறச் சொல்வதா?

ஜெயந்தி நடராஜன் வெளியேறியதை அடுத்து கருத்துக் கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மற்றொருவரும் வாரிசோடு வெளியேறினால் நல்லது என்று கூறியதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஜெயந்தி நடராஜன் பதவி விலகியதற்கு கோடானு கோடி நன்றிகள் என்று கூறிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சியில் இருந்து மற்றொருவரும் வாரிசோடு வெளியேறினால், கட்சியே விமோசனம் அடையும் என்று தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உடனடியாக அதிருப்தி வெளியிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இளங்கோவனின் கருத்துகள் மீடியாக்களில் வெளியான சில நிமிடங்களிலேயே சோனியா, இளங்கோவனை அழைத்து அதிருப்தி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. nakkheeran.in

கருத்துகள் இல்லை: