வெள்ளி, 5 டிசம்பர், 2014

பி ஆர் பி குழுவினர் நிலத்தை பறித்ததாக போலீசாரே சகாயத்திடம் புகார்

மதுரை: 3வது நாள் விசாரணையில் சகாயத்திடம் உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் புகார் அளித்துள்ளனர். தல்லாகுளம் எஸ்.ஐ. ராதாகிருஷ்ணன், அண்ணாநகர் காவலர் முருகேசன் ஆகியோர் மனு அளித்துள்ளார். 2001ல் பி.ஆர்.பி. குழுவினர் தங்களை மிரட்டி நிலத்தை அபகரித்ததாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுதாமரைப்பட்டியில் அபகரித்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். சகாயம் குழுவுக்கு பாதுகாப்பாக இருக்கும் போலீசாரே வந்து மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது dinakaran .com

கருத்துகள் இல்லை: