புதன், 3 டிசம்பர், 2014

சட்டசபை மூன்று நாட்களுக்கு மட்டும் கூடும் ?

நடக்காத சட்டசபையை முதலில் கலையுங்க
சென்னை: தமிழக சட்டசபை கூட்டம், மூன்று நாட்கள் மட்டும் நடைபெற வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை கூட்டம் நாளை துவங்குகிறது. இக்கூட்டத்தில், பருப்பு ஊழல், முட்டை முறைகேடு, பால் ஊழல், கனிமவள முறைகேடு, முல்லைப் பெரியாறு அணை பிரச்னை, அரசு அலுவலகங்களில், ஜெயலலிதா படத்தை அகற்றாதது என, பல பிரச்னைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. >இதுகுறித்து, சட்டசபை செயலக அதிகாரிகள் கூறியதாவது: சட்டசபை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்பது, கூட்டம் துவங்கும் நாளில், அலுவல் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கும். முதலில், ஒரு வாரம் கூட்டம் நடத்த, அரசு முடிவு செய்தது. ஆனால், தற்போது, மூன்று நாட்கள் மட்டும் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.dinamalar.com  அம்மா பஜனை பாசுரம் எல்லாம் படிக்க மூன்று நாள் போதுமா?

கருத்துகள் இல்லை: