சனி, 1 நவம்பர், 2014

கர்நாடகாவில் மாணவியை பலாத்காரம் செய்து வாயில் விஷம் ஊற்றி கொலை!

A Class 8 student died at a private hospital in Manipal on Friday, two days after she was kidnapped and allegedly raped by unidentified miscreants near Thirthahalli in Shivamogga district.
It is learnt that the rapists had poisoned Nandita, a resident of Balebailu near Thirthahalli, after allegedly gang-raping her at Anandagiri hills. The victim was brought to Manipal for emergency treatment on October 30.
தீர்த்தஹள்ளி அருகே பள்ளி மாணவியை கற்பழித்து அவரது வாயில் விஷம் ஊற்றி மர்மநபர்கள் கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்து உள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மயங்கி கிடந்த பள்ளி மாணவி சிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி நகரை சேர்ந்த 16 வயது இளம்பெண், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில், கடந்த 29–ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி அதிகநேரம் ஆனபோதிலும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அவளை அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், ‘உங்களது மகள் தீர்த்தஹள்ளி நகரையொட்டி உள்ள ஆனந்தகிரி மலை பகுதியில் மயங்கிய நிலையில் கிடக்கிறாள்’ என்று மாணவியின் பெற்றோருக்கு அன்று மாலை தகவல் வந்தது. இதையடுத்து, அவர்கள் பதறியடித்துக் கொண்டு அங்கு ஓடோடி சென்றனர். அங்கு மயங்கிய நிலையில் கிடந்த மாணவியை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
கற்பழிப்பு–கொலை
பின்னர் அவரை அவர்கள் மீட்டு உடுப்பி மணிப்பால் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் கற்பழிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரை கொலை செய்ய வாயில் மர்மநபர்கள் விஷம் ஊற்றி இருப்பதாகவும் மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இதை கேட்டு மாணவியின் பெற்றோர் திடுக்கிட்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு டாக்டர்கள் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், அந்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

3 பேருக்கு வலைவீச்சு

அந்த மாணவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது, தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கண்ணீர் மல்க கூறி உள்ளார். அவர் 3 பேர் தன்னை கற்பழித்தனர் என்று கூறியதாக தெரிகிறது. அந்த மாணவி கொடுத்த தகவலின் பேரில் அவரது பெற்றோர் தீர்த்தஹள்ளி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை கற்பழித்து வாயில் விஷம் ஊற்றி கொலை செய்ததாக 3 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் தீர்த்தஹள்ளி பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.  dailythanthi.in

கருத்துகள் இல்லை: