வெள்ளி, 31 அக்டோபர், 2014

திருநாவுகரசர் : திருமண நிகழ்ச்சியில் சந்திப்பதை கூட்டணி அச்சாரம் என்று கருத கூடாது !

திருமண நிகழ்ச்சியில் கட்சித்தலைவர்கள் சந்திப்பதை கூட்டணிக்கு அச்சாரமாக நினைக்கக்கூடாது : திருநாவுக்கரசர் காங்கிரஸ் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் தேவர் ஜெயந்திக்காக பசும்பொன் சென்றார்.  அங்கே அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘’திருமண நிகழ்ச்சியின்போது கட்சித்தலைவர்கள் சந்தித்து பேசுவது உண்டு.இதை கூட்டணிக்கு அச்சாரமாக நினைக்கக்கூடாது. தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து பேசமுடியும். தற்போது பலவீனமாக உள்ள காங்கிரஸ் தன்னை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. பால் விலை, மின்சார கட்டண உயர்வு குறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்’’ என்றார். அவிங்க சந்தித்துகூட்டணிக்கான அச்சாரம் மட்டுமல்ல கூட்டணியே தான் என்று ஓரளவு சொல்லியே விட்டார்கள் . இவரு அதுக்கு போயி ஏன் பயப்படனும் ? புரியல்லையே ?

கருத்துகள் இல்லை: