வெள்ளி, 31 அக்டோபர், 2014

கலி.பூங்குன்றன்: துடைப்பக்கட்டையா ? முதல்ல கையால் மலத்தை அள்ளி தலையில் சுமப்பதை நிறுத்துங்கள் !


Gujarat turns a blind eye to manual scavenging  
கைகளால் மலம் அள்ளும் தொழில் இன்றும் உள்ள மாநிலங்கள் முதலிடம்
உத்தரப்பிரதேசம்,
இரண்டாமிடம் டில்லி,
மூன்றாமிடம் ராஜஸ்தான்,
நான்காமிடம் குஜராத்
அய்ந்தாமிடம் மத்தியப்பிரதேசம்
ஆறாமிடம் பிகார்
ஏழாமிடம் ஆந்திரா-தெலுங்கானா
எட்டாமிடம் அரியானா
ஒன்பதாமிடம் சத்தீஷ்கர்
பத்தாமிடம் ஒரிசா
தமிழ்நாட்டில் இன்றும் சுமார் 30,000 குடும்பங்கள் கைகளால் மலம் அள்ளும் தொழில் செய்துவருகின்றனர்.
அய்.டி. கம்பெனிகள், இணையதளம், முகநூல், மால்கள், காபி ஷாப், பங்குச் சந்தை, செவ்வாய்க் கோளை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும் மங்கள்யான் விண்கலம் எனப் பளபளப்பாகக் காட்டப்படும் இந்தியாவின் இருண்ட, இழிந்த பக்கம்தான் கையால் மலம் அள்ளும் தொழில்.
இந்தத் தொழில் இந்தியாவின் ஏதோவொரு பின்தங்கிய மாநிலத்தின், பின்தங்கிய குக்கிராமத்தில் நடைபெறலாம் என யாராவது நினைத்துக் கொண்டால், அதைவிட அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது.
கையால் மலம் அள்ளும் இழிதொழில் பின்தங்கிய பிகாரில் மட்டுமின்றி, வளர்ச்சிக்கே வழிகாட்டும் மாநிலமாகப் பீற்றிக் கொள்ளப்படும் குஜராத்திலும் இன்றளவும் நடந்து வருகிறது.

தலைநகர் டில்லி, குஜராத்தின் அகமதாபாத் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு நகரங்களிலும் 256 மாவட்டங்களிலும் காணப்படுகிறது. உள்ளாட்சி நிர்வாகம் தொடங்கி ரயில்வே துறை, பாதுகாப்புத் துறை என மய்ய அரசின் பல்வேறு பிரிவுகளிலும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு, நாடெங்கிலும் 7,50,000 குடும்பங்கள் கையால் மலம் அள்ளும் தொழிலைச் செய்து வருவதாகக் குறிப்பிடுகிறது.
இந்தப் புள்ளி விவரம் ரயில்வே துறையில் வேலை செய்துவரும் மலம் அள்ளும் தொழிலாளர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தயாரிக்கப்படவில்லை எனக் குற்றம் சுமத்தும் அரசு சாரா அமைப்புகள், அத்தொழிலாளர் களையும் சேர்த்தால், நாடெங்கும் ஏறத்தாழ 13 இலட்சம் குடும்பங்கள் கையால் மலம் அள்ளும் தொழிலைச் செய்து வருவதாகக் கூறுகின்றன.
சுகாதாரப் பணி என அலங்காரமாகச் சொல்லப்படும் மலத்தை அள்ளுவதும், சாக்கடையைச் சுத்தம் செய்வதும் தாழ்த்தப்பட்ட ஜாதிகளுக்குள்ளேயே அடித்தட்டில் இருக்கும் அருந்ததியர், ஆதி ஆந்திரா, வால்மீகி உள்ளிட்ட சில பிரிவு மக்களின்மீது திணிக்கப்பட்டுக் கடைப்பிடிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் பாதாளச் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டால், அதற்குள் இறங்கி அடைப்பை நீக்கும் பொறுப் பைத் தாழ்த்தப்பட்ட ஆண்கள் மீது சுமத்தியிருக்கும் இந்திய இந்துத்துவா ஜாதி சமூக அமைப்பு, மலத்தைக் கையால் அள்ளிச் சுத்தம் செய்வதைத் தாழ்த்தப்பட்ட பெண்கள்மீது சுமத்தியிருக்கிறது.
என்னுடைய உடம்பின் ஒவ்வொரு அங்கமும் நாறுகிறது; பலமுறை குளித்த பிறகும் நாறுகிறது. என்னால் சோற்றில் கை வைக்க முடியவில்லை; எனக்கு வேறு எந்த வேலையாவது கொடுங்கள். தயவு செய்து இந்த நரகத்திலிருந்து எனக்கு விடுதலை கொடுங்கள் என்கிறார், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மலம் அள்ளும் தொழிலாளி சரசுவதி. அவர் மலத்தை அள்ளிக் கொண்டு வரும்பொழுது ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த இளைஞர்கள், இன்று நீ நடிகை கார்தீனா கைஃப் போல இருக்கிறாய் எனக் கேலி பேசுவார்கள். அதைக் கேட்டும் கேட்காததுபோல நான் நடந்து செல்வேன் என்று அன்றாடம் தனது மனது படும் வலியை விவரிக்கிறார், அவர்.
இந்தியாவைக் காக்க வந்திருக்கும் ரட்சகனாக நம்முன் நிறுத்தப்படும் மோடி, வால்மீகி ஜாதியினர் மலத்தைக் கையால் அள்ளிச் சுத்தம் செய்வதை ஆன்மப் பரிசோதனையாகச் செய்து வருகின்றனர் எனச் சாதித் திமிரோடு நியாயப்படுத்திப் பேசவில்லையா?
கர்மயோக் என்ற நூலில் அவர் என்ன எழுதியிருக்கிறார்?
Scavenging must have been a spiritual experience for the valmiki caste. At some time some body have got enlightment in scavenging, they must have been taught that it is their duty to work for the happiness of the entire society and the gods.
"சில வேளைகளில் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருப் போருக்கு ஞானம் ஊட்டப் பெறலாம்; அவர்கள் செய்யும் வேலை சமூகத்தில் மகிழ்ச்சிக்காகவும், கடவுளின் சந்தோஷத் திற்காகவும் செய்யப்படுவதாகவும் கருதலாம்" - இதுதான் கர்மயோக் என்ற நூலில் மோடி குறிப்பிட்டுள்ள பகுதியாகும்.
மலம் எடுக்கும் தொழிலைக் கேவலமாகக் கருதிய காலம் உண்டு. மலம் எடுப்பதற்கென்றே தனி ஜாதியும் இந்து வருணாசிரம அமைப்பு முறையிலும் உண்டு; அதைத்தான் வால்மீகி ஜாதி என்று மோடி குறிப்பிடுகிறார்.
அந்தத் தொழிலை, இழிவு என்று கருதி, அம்மக்கள் மத்தியில் கல்வி ஆர்வம் அரும்பும் நிலை ஏற்படும் பொழுது, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்காகப் போராடி, அதனைப் பெற்றுவரும் ஒரு காலகட்டத்தில், அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, அரசே வெளியிட்ட நூலில், மலம் எடுப்பதை இழிவான தொழிலாகக் கருதாதீர்கள். அந்தத் தொழிலைச் செய்வதானது கடவுளுக்குச் சந்தோஷத் தைத் தரக் கூடியது என்று சொல்ல முன் வந்தார் என்பதைக் கவனிக்கவேண்டும் என்கிறார்.
கைகளால் மலம் அள்ளும் முறை முற்றிலும் தடைசெய்யப்பட்ட மாநிலங்கள்
யூனியன் பிரதேசங்கள் சிக்கிம், கோவா, லட்சத் தீவுகள்.
கைகளால் மலம் அள்ளும் தொழில் இன்றும் உள்ள மாநிலங்கள் முதலிடம்
உத்தரப்பிரதேசம்,
இரண்டாமிடம் டில்லி,
மூன்றாமிடம் ராஜஸ்தான்,
நான்காமிடம் குஜராத்
அய்ந்தாமிடம் மத்தியப்பிரதேசம்
ஆறாமிடம் பிகார்
ஏழாமிடம் ஆந்திரா-தெலுங்கானா
எட்டாமிடம் அரியானா
ஒன்பதாமிடம் சத்தீஷ்கர்
பத்தாமிடம் ஒரிசா
தமிழ்நாட்டில் இன்றும் சுமார் 30,000 குடும்பங்கள் கைகளால் மலம் அள்ளும் தொழில் செய்துவருகின்றனர்.
நாட்டைத் தூய்மைப்படுத்தப் போவதாக துடைப்பத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தொலைக்காட்சிக்குத் தோற்றப் பொலிவைக் (Pose) காட்டட்டும்; வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்கு முன் கையால் மலத்தை அள்ளி, தலையில் சுமக்கும் கேடுகெட்ட தன்மைக்கு முடிவு கட்டட்டும்!
மலம் அள்ளுவதைக்கூட கர்ம யோக் என்று இந்துத்துவா மொழியில் சிந்திப்பதை- பேசுவதை நிறுத்திக் கொள்ளட்டும்!  http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/gujarat-turns-a-blind-eye-to-manual-scavenging/article6293429.ece

கருத்துகள் இல்லை: