செவ்வாய், 28 அக்டோபர், 2014

அமிதாப் பச்சனுக்கு அமெரிக்க கோர்ட்டு சம்மன் ! சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை தூண்டினார் ?

லாஸ் ஏஞ்சல்ஸ், 1984-ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக நியூயார்கை சேர்ந்த எஸ்.எஃப்.ஜே இயக்கம் பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் மீது அமெரிக்க மாவட்ட கோர்ட்டு ஒன்றில் வழக்கு தொடுத்தது.
கலிபோர்னியாவை சேர்ந்த மோஹிந்தர் சிங், டெல்லியை சேர்ந்த பாபு சிங் துகியா ஆகியோர் இவ்வழக்கை தொடுத்திருந்தனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க கோர்ட்டு அமிதாப்புக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 21 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. 35 பக்கங்கள் கொண்ட இந்த குற்றச்சாட்டில் பிரதமர் இந்திரா காந்தி படுகொலைக்கு பின் அமிதாப் பச்சன் மக்களை வன்முறைக்கு தூண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.dailythanthi.in

கருத்துகள் இல்லை: