ஞாயிறு, 26 அக்டோபர், 2014

கம்பீரமான திரைகதையில் ஆரஞ்சு மிட்டாய் ஆஷிர்தா !


வன்மம், இடம் பொருள் ஏவல், ஆரஞ்சு மிட்டாய், மெல்லிசை, புறம்போக்கு, நானும் ரௌடி தான் என பல படங்களில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால்  பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்திற்கு பிறகு எந்த படங்களும் வெளிவராமல் சிறு இடைவெளி ஏற்பட்டுவிட்டது.மற்ற படங்களின் ரிலீஸ் தேதியை தன்னால் நிர்ணயிக்கமுடியாது என்பதால், விஜய் சேதுபதி தயாரித்துள்ள ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தை ரிலீஸ்செய்யப்போகிறாராம். நவம்பர் கடைசியில் இசை வெளியீடு, டிசம்பரில் படம் ரிலீஸ் என பிளான் செய்து அதற்கான வேலைகளிலும் இறங்கியிருப்பதாக தெரிகிறது.வயதான தளர்வான தோற்றத்தில் நடித்தாலும் ஆரஞ்சு மிட்டாய் கம்பீரமான திரைக்கதை என்று மார்தட்டுகின்றனர் படக்குழுவினர். ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தின் தயாரிப்பாளரான விஜய் சேதுபதி தான் இந்த திரைப்படத்தின் வசனகர்த்தாவும் என்பது குறிப்பிடத்தக்கது.<

கருத்துகள் இல்லை: