செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

பாகிஸ்தானிடம் கெடுபிடி காட்டும் இந்தியா சீனாவிடம் பணிந்து போவது ஏன்? காங்கிரஸ் கேள்வி

எல்லை விவகாரத்தில் பாகிஸ்தானிடம் கெடுபிடி காட்டும் பா.ஜ.க. அரசு, சீனாவிடம் பணிந்து போவது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.டெல்லியில் இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி,சீன ராணுவம் வடக்கு லடாக் பகுதியில் சுமார் 25 கிலோ மீட்டர் நுழைந்துள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால் மத்திய அரசு இதனை நியாயப்படுத்த பார்க்கிறது. தற்போது ஊடுருவிய பகுதிகளில் சீன ராணுவத்தை நிலை நிறுத்த இந்தியா அனுமதிக்குமா என்றார்.இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ராணுவ தளபதி தல்பீர்சிங் சுஹாக், எல்லையில் ஊடுருவல் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.


ஐம்மு காஷ்மீர் மாநிலத்தின் வடக்கு லடாக் பகுதியில் உள்ள பர்சே என்னும் இடத்தில் 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய ராணுவம் புதிய ரோந்து தளம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக சென்றனர். அப்போது, இந்திய - சீன எல்லையில் உள்ள கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை கடந்து இந்திய எல்லைக்குள் 25 கிலோ மீட்டர் தூரத்தில் சீன ராணுவத்தினர் கூடாரம் அமைத்திருப்பதாக இந்திய வீரர்கள் கண்டதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. nakkheeran.in

கருத்துகள் இல்லை: