செவ்வாய், 15 ஜூலை, 2014

Brics மாநாட்டில் மோடி : தீவிரவாதம் எந்த ரூபத்திலும் வந்தாலும் மனித குலத்துக்கு எதிரானது !

பிரேசில்: தீவிரவாதம் எந்த ரூபத்திலும் வந்தாலும் மனித குலத்துக்கு எதிரானது என்று மோடி தெரிவித்துள்ளார். பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். ஆப்கன் முதல் ஆப்பிரிக்கா வரை பல நாடுகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்படுகின்றது. தீவிரவாதத்தை சிறிது கூட சகித்துக் கொள்ள கூடாது என நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தீவிரவாதத்தை எதிர்க்காமல் விட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்றும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.dinakaran.com

கருத்துகள் இல்லை: