
உலகின்
மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் இன்னும் அடிமைத்தனம் மட்டும்
ஒழியவில்லை என்பதற்கு அவ்வப்போது ஒருசில எடுத்துக்காட்டு நிகழ்ச்சிகள்
நடந்து வருகின்றன.
ஐதராபாத்தின் இருந்து 150 கிமீ தொலைவில்
உள்ள ஒரு சிறு கிராமத்தில் உள்ள செங்கல்சுள்ளையில் ஒரிசாவில் இருந்து
பிழைக்க வந்த ஒரு கும்பல் வேலைபார்த்து வந்தது.
மிகவும்
கடினமான வேலையாக இருந்ததாலும், கூலி சரியாக கிடைக்காததாலும், அங்கிருந்து
12 பேர் கொண்ட ஒரு குழு தப்பிக்க முயன்றனர். ஆனால் அவர்களுள் மூன்று பேர்
செங்கல்சுள்ளை முதலாளியிடம் பிடிபட்டனர்.

ஒரு கையை இழந்த துக்கத்தோடு மீண்டும்
ஒரிஸ்ஸா வந்து பிழைப்பதற்கும் வழியில்லாமல் இருப்பதாக தற்போது
வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த ஒரிஸ்ஸாவில் உள்ள சமூக அமைப்புகள் போராட்டம்
நடத்தி வருகிறது. இதனால் ஆந்திர, ஒரிஸ்ஸா எல்லைப்பகுதியில் பெரும் பதட்டம்
நிலவுகிறது. ilakkiya.info
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக