புதன், 16 ஜூலை, 2014

துபாயில் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் குடும்பத்தோடு கொலைசெய்யப்பட்டார் ?

Santhosh  Kumar, who owns the production company Souparnika Films in the south Indian state of Kerala, was a co-producer of hit Malayalam movie Madambi and remakes of classic hits like Neelathaamara and Rathinirvedham.
துபாயில் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். கேரளாவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். சோபார்னிகா பிலிம்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் இவர் 5 ஆண்டுகளுக்கு முன் துபாய் சென்ற அவர் அங்கு வர்த்தக நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார். இந்நிலையில் சந்தோஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை வியாழக்கிழமை முதல் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவரது உறவினர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சந்தோஷ் குமார் வசித்த வீட்டிற்குச் சென்றனர். வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று சோதனை செய்தனர்.; அப்போது சந்தோஷ் குமார், அவரது மனைவி மஞ்சு மற்றும் மகள் கவுரி ஆகியோர் படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்களின் உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. சடலங்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் maalaimalar.com

கருத்துகள் இல்லை: