புதன், 16 ஜூலை, 2014

உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் காதலாமே ? தற்கொலை முயற்சியாமே ? வெறும் புகையா ? நெருப்பில் இருந்து புகையா ?

திரையுலகில் அண்மைக் காலமாக மீண்டும் பட வாய்ப்புகள் பெற்று அடுத்த சுற்றில் வலம் வரும் நடிகை நயன்தாராவுடன் உதயநிதிக்கு காதல் பிரச்னை இருப்பதாகவும், அதனால் அவர் மனவருத்தத்தில் மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றதாகவும் ஒரு வலைத்தளத் தகவலும் சமூக வலைத்தளங்களில் செய்திகளும் வேகமாகப் பரவின. உதயநிதி மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது தற்கொலை முயற்சி குறித்து மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்ததாகவும் சமூக ஊடகங்களில் இன்று காலை முதலே பரவலாக விவாதிக்கப்பட்டது.

உதயநிதி, ஸ்டாலின் இருவரும் இணைந்து வேலன் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடித்த போது இருவரும் இணைந்து, பழனி மலைக் கோவிலுக்குச் சென்று வழிபட்டனர். அப்போது, ஊடகங்களில் இந்தத் தகவல் பரவியது. இதை அடுத்து, குடும்பத்தின் மூத்தவரான கருணாநிதி, உதயநிதியை அழைத்து கண்டித்ததாகவும் தகவல் பரவியது.இந்நிலையில், முதல் படத்தில் துவங்கிய இவர்களின் நெருக்கம் இரண்டாவது படத்திலும் தொடர்ந்தது. உதயநிதி, இந்தப் படத்திலும் நயன்தாராவையே ஜோடியாக்கினார். இந்த நட்பே அவருக்கு நாளடைவில் நயன்தாரா மீது காதலாக மாறிவிட்டதாம். ஆனால், நயன்தாரா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்படவே, உதயநிதி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. அந்நேரம், உதயநிதிக்கு நெருக்கமான நடிகர் ஒருவர், அவரை உடனே மருத்துவமனையில் சேர்த்ததாக கோலிவுட் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், இப்படிச் செய்தி வெளியானதால், உதயநிதி ஆதரவாளர்கள் பெரும் கொந்தளிப்படைந்தனர். இதனால் சென்னையில் சில இடங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காவல் பணியில் போலீஸார் அதிக அளவில் ஈடுபடுத்தப் பட்டனர் dinamani.com

கருத்துகள் இல்லை: