ஞாயிறு, 13 ஜூலை, 2014

மேனகா காந்தி : சிறுவர்களுக்கான தண்டனை வயது 16 ஆக விரைவில் குறைப்பு! விரைவில் சட்ட திருத்தம் !

டெல்லியில்  நடந்த  பாலியல்  பயங்கரவாதத்தின்  பின் பலரும் சிறுவர் தண்டனை வயதை  பதினாறாக குறைக்குமாறு கோரிக்கைகள் விடுத்தனர்.  ஏனெனில் அந்த சம்பவத்தில்  பாதிக்கப்பட்ட ஜோதி சிங்மீது அதிகப்படியான பாலியல் பலாத்காரம் புரிந்து அவரின் மரணத்திற்கு காரணமானவன் அதன் பதினாறு வயது சிறுவன்தான் . ஆனாலும் காங்கிரஸ் அரசு  அதில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை . அதன் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்தான், தற்போது  மகளிர் நலத்துறை அமைச்சராக இருக்கும் மேனகா காந்தி அவர்கள் இன்று சென்னையில் பேசும் பொழுது  விரைவில்  தண்டனைக்கு உரிய வயது எல்லை பதினாறாக குறைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: