செவ்வாய், 17 செப்டம்பர், 2013

மோடி பிரதமராக அத்வானி ஆதரவு ! மறுப்பு வெறுப்பு விருப்பு ? உண்மைய சொல்லுங்க சார் என்ன பண்ணினாங்க ?

ராய்ப்பூர்: ""நாட்டின் நலனை கருத்தில் கொண்டே, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, மோடி நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு, பிரதமர் பதவி கிடைக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்,'' என, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி கூறியுள்ளார். முதலில் புறக்கணிப்பு: பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டார். அதற்கு, அக்கட்சியின் மூத்த தலைவர், அத்வானி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. மோடியை அந்த பொறுப்பிற்கு அறிவிப்பதற்காக கூடிய, பா.ஜ., பார்லிமென்ட் குழு கூட்டத்தில், அத்வானி பங்கேற்கவில்லை. அத்வானியின் விருப்பத்திற்கு மாறாக, மோடிக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது என, பேசப்பட்டது. அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் கூட, இதை ஒப்புக் கொண்டனர். "மோடிக்கு இப்போது இந்தப் பதவி வழங்க வேண்டாம்; நான்கு மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த பின் அறிவித்துக் கொள்ளலாம் என்று தான் அத்வானி கூறி வந்தார்' என, அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அத்வானி, மோடியை பாராட்டி பேசினார். இது ஒருவேளை உயிருக்கு பயந்து கொடுத்த ஆதரவாக இருக்கலாம் அல்லது 5 மாநில தேர்தலில் பா ஜா கா தோற்றால் மோடியால் தோற்றது என்று அவரை கவிழ்க்கும் சதியாகவும் இருக்கலாம்
பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், ராமன் சிங் தலைமையிலான சத்தீஸ்கர் மாநிலத்தின், கோர்பா நகரில், 500 மெகா வாட் மின் உற்பத்தி நிலையத்தை துவக்கி வைத்த அத்வானி, அந்நிகழ்ச்சியில் பேசியதாவது: இந்த மாநில மாநிலம் பெற்றுள்ளது.
இப்போது பாராட்டு:
நாட்டின் பிற மாநிலங்களில், மின் பற்றாக்குறை நிலவிய நேரத்தில், 24 மணி நேரமும், மாநிலம் முழுவதும் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்தவர் ராமன் சிங். மற்றொரு உதாரணத்தையும் நான் கூற முடியும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, எங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். குஜராத்தின் அனைத்து கிராமங்களுக்கும், மின்சாரம் கிடைக்கச் செய்தவர் அவர். அவர் முதல்வராக இருக்கும் மாநிலத்தின், எம்.பி.,யாக நான் உள்ளேன். குஜராத் முன்னேற்றத்திற்காக, முதல்வர் மோடி ஏராளமாக செய்துள்ளார். மத்திய பிரதேச முதல்வர், சிவராஜ் சிங்கும், மத்திய பிரதேச கிராமங்கள் அனைத்திற்கும் மின்சாரம் கொண்டு வருவேன் என, உறுதியளித்து, அதன்படி திறம்பட செயல்பட்டு வருகிறார். இவ்வாறு, அத்வானி கூறினார்.

பின் அவர், நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது, ""நாட்டின் நலனை கருத்தில் கொண்டே, பிரதமர் பதவிக்கு மோடி வர வேண்டும் என்பதற்காகத் தான், அவரை, பிரதமர் வேட்பாளராக நாங்கள் தேர்ந்தெடுத்து உள்ளோம்,'' என்றார் அத்வானி. வெளிப்படையாக, மோடியை அத்வானி பாராட்டியுள்ளதன் மூலம், மோடி மீது எவ்வித காழ்ப்புணர்ச்சியும் அத்வானிக்கு இல்லை என்பது தெளிவாகி உள்ளது.
முதல்வர், ராமன் சிங்கை, சாதாரண கட்சித் தொண்டராக இருந்ததில் இரு எனக்குத் தெரியும். தொண்டராக இருந்த அவர், எம்.பி.,யாக ஆனார்; இப்போது, முதல்வராக உள்ளார். திறமையான, நேர்மையான, சிறந்த நிர்வாகத்தை வழங்கும் முதல்வரை, இந்த மாநிலம் பெற்றுள்ளது. dinamalar,com

கருத்துகள் இல்லை: