புதன், 18 செப்டம்பர், 2013

விரைவில் புலன்விசாரணை ! ஊரான் நிலத்தையெல்லாம் வளைத்து செல்வம் சேர்த்த திரைப்பட இயக்குனர்

சென்னை: அந்த இயக்குநர் தொன்னூறுகளில் பிரபலமாக இருந்தவர். தான் அறிமுகப்படுத்திய நடிகையையே திருமணம் செய்தவர். இங்கே அவர்
தமிழ், தமிழர் உரிமை, தமிழ் தேசியம் என்றெல்லாம் முழங்கினாலும், மனைவி பக்கத்து மாநிலத்தில் இவர் கடுமையாக எதிர்க்கும் கட்சியில்தான் குப்பை கொட்டுகிறார். அறிமுகம் போதுமல்லவா... இந்த இயக்குநருக்கு நிலத்தை பட்டா போட்டுக் கொள்வதில் அப்படி ஒரு பேராசையாம். இதுவரை இவர் குவித்துள்ள நிலங்களின் மதிப்பு மட்டும் ரூ 200 கோடியைத் தாண்டும் என்கிறார்கள். குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டுமே ரூ 100 கோடிக்கு மேல் பல நூறு ஏக்கர் நிலங்களை மடக்கி வைத்துள்ளாராம் இயக்குநர். இந்த நிலங்கள் ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளில் அமைந்துள்ளவானம். அரசுப் புறம்போக்கு, அவசரத்துக்கு காசு தேவைப்படும் ஏழைகள் நிலங்கள், வாரிசற்றவர்கள் நிலங்கள் என வகை தொகை இல்லாமல் வளைத்துப் போட்டுள்ளாராம் இயக்குநர். இதில் ஏற்படும் வில்லங்கங்களை சரிக்கட்ட ஒரு முக்கியமான அரசியல் தலைவரை கைக்குள் போட்டுக் கொண்டுள்ளாராம் இயக்குநர். இருவரும் கிட்டத்தட்ட தினசரி சந்தித்துக் கொள்வதோடு, அன்றாட நிலப் பஞ்சாயத்துக்களை தங்கள் ஆட்களை வைத்து சாமதானபேத தண்ட முறையில் சமாளிக்கிறார்களாம். கமிஷனர் அலுவலகத்தில் உள்ள நில மோசடி பிரிவு எப்போ வேணும்னாலும் புலன் விசாரணையில் குதிக்கும் என்கிறார்கள், அரசியல் தலைவரின் அடிப்பொடிகள்
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: