புதன், 18 செப்டம்பர், 2013

மோடி வித்தைகாரனுக்கு ஆணி அடிக்க நாடகம் ஆடும் பெருசு

அத்வானி, மோடி இருவருக்கிடையிலும் கருத்து வேறுபாடுகள் தொடர்கிறது: ராஜீவ் சுக்லா
நரேந்திர மோடியை அத்வானி பாராட்டியிருப்பது வெறும் நாடகம் என அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறினார்.
கான்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜகவினர் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொருவரும் வேறுபாடான கருத்துகளை கூறி வருகின்றனர். அத்வானி ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தை புறக்கணித்தார். இவையனைத்துமே மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் அக்கட்சியினரிடையே ஒருமித்த கருத்து இல்லை என்பதையே காட்டுகின்றன என்றார்.
மேலும் பேசிய அவர், நரேந்திர மோடியை அத்வானி பாராட்டியிருப்பது வெறும் நாடகமே என்றும், அவர்கள் இருவருக்கிடையிலும் கருத்து வேறுபாடுகள் தொடர்வதாகவும் கூறினார்

கருத்துகள் இல்லை: