வெள்ளி, 20 செப்டம்பர், 2013

முலயம்சிங்கின் சொத்துகுவிப்புக்கு எதிரான ஆதாரங்கள் இல்லையாமே ? சிபி ஐ திடீர் கண்டு பிடிப்பு ! வெற்றி மீது வெற்றி வந்து முலாயமை சேரும் !

புதுடில்லி: சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கிற்கு எதிரான,
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கு விசாரணையில், போதிய ஆதாரங்கள் இல்லை என , சி.பி.ஐ., முடிவு விசாரணையில் இருந்து விலகியது இது தொடர்பாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்ததாவது: "முலாயம் சிங்கும், அவரின் குடும்பத்தினரும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர். அது பற்றி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, வழக்கறிஞர் விஸ்வநாதன் சதுர்வேதி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், "முலாயம் சிங் குடும்பத்தினரின் சொத்து தொடர்பாக, விசாரணை நடத்த வேண்டும்' என, சி.பி.ஐ.,க்கு, 2007, மார்ச், 1ல் உத்தரவிட்டது.

இதையடுத்து, விசாரணை நடத்திய சி.பி.ஐ., "முலாயம் சிங் குடும்பத்தினர், வருமானத்திற்கு அதிகமாக, 2.63 கோடி ரூபாய் அளவுக்கு, சொத்து சேர்த்திருப்பது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது' என, அதே ஆண்டில், கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது. இதன்பின், நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், 2.63 கோடி ரூபாய் சொத்தில், 1.4 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள், முலாயம் சிங்கின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான, டிம்பிள் பெயரில் இருப்பது தெரியவந்தது. இது, வழக்கிற்கு பலவீனமாக அமைந்தது.

கடந்த டிசம்பரில், சுப்ரீம் கோர்ட், மற்றொரு உத்தரவை பிறப்பித்தது. அதில், டிம்பிளுக்கு எதிரான விசாரணையை கைவிட்டு, முலாயம் சிங் மற்றும் அவரின் இரு மகன்களுக்கு எதிரான, புகார்கள் குறித்து மட்டும் விசாரிக்கும்படி தெரிவித்தது. இதனால், வழக்கு மேலும் பலவீனம் அடைந்தது. மேலும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, முலாயம் சிங்கிற்கு எதிராக, எந்த விதமான ஆதாரங்களையும் திரட்ட முடியவில்லை.

அத்துடன், சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணையின் போது, முலாயம் சிங்கின் ஒவ்வொரு சொத்துகள் தொடர்பாகவும், அவரின் ஆடிட்டர் விரிவான விளக்கம் அளித்துள்ளார். அதனால், முலாயம் சிங்கிற்கு எதிராக வழக்கை, முடிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. . இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்த

கருத்துகள் இல்லை: