சனி, 28 செப்டம்பர், 2013

வாய்ப்பில்லாமல் வீட்டில் இருக்கும் ஹீரோகூட 40 லட்சம் கேட்கிறான் ! டைரக்டர் புலம்பல்

சென்னை:பட வாய்ப்பில்லாமல் வீட்டில் சும்மா இருக்கும் ஹீரோ கூட ரூ. 40
சம்பளம் கேட்டு பயமுறுத்துகிறார் என்றார் இயக்குனர் பாபு தூயவன்.ரஜினி நடித்த ‘தாய் மீது சத்தியம், ‘அன்புக்கு நான் அடிமை, ‘பொல்லாதவன் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர் தூயவன். இவரது மகன் பாபு தூயவன் தற்போது ‘கதம் கதம்‘ என்ற படம் இயக்குகிறார். அவர் கூறியதாவது:தமிழ்நாடு திரைப்பட கல்லூரியில் படித்தேன். என் தந்தை பெயரை சொன்னால் ஹீரோக்கள் கதை கேட்பார்கள். ஆனால் அவர் பெயரை பயன்படுத்தாமல் ஹீரோக்களுக்கு கதை சொல்ல முயன்றேன். சிலர் கேட்டனர். சிலர் கேட்கவில்லை. நடுத்தர மார்க்கெட் உள்ள ஹீரோக்களிடம் கதை சொல்லச் சென்றபோது அவர்கள் ஸ்கிரிப்ட் பற்றி கேள்வி எழுப்பியதுடன் அதிக பட்ஜெட்டில்  படம் எடுக்க வேண்டும் என்றனர். அதைக்கேட்டு ஷாக் ஆனேன். ஒரு சில ஹீரோக்கள் படமே இல்லாமல் வீட்டில் சும்மாவே இருக்கிறார்கள். அவர்களிடம் கதை சொல்லச் சென்றபோது ரூ. 40 லட்சம் சம்பளம் கேட்டார்கள். இது இன்னும் ஷாக்காக இருந்தது. இறுதியில் இப்படத்தில் நடிக்க நந்தா கால்ஷீட் தந்தார் - tamilmurasu.org

கருத்துகள் இல்லை: