திங்கள், 8 ஏப்ரல், 2013

கர்நாடகாவில் மூன்று சாமியார்கள் மரணம் தீக்குளித்தனரா ? கொலையா ?

Jagannath Swami (30), Eera Reddy Swami (45) and Pranav Swami (16), are believed to have sat on a mound of firewood and set fire to it after dousing it with kerosene at around 4.30 a.m., police said. They were all followers of the late Sri Ganeshwar Avadhoot Maharaj, who died on February 28.

கர்நாடகாவில் சவுலி மடத்தை சேர்ந்த சாமியார்களான ஜெகநாத சுவாமி (வயது 21), சரணய்யா சுவாமி (வயது 18) மற்றும் வி. ரெட்டி சுவாமி (வயது 50) ஆகிய 3 பேரும் மடத்தின் வளாகத்தில் உள்ள மர கட்டைகள் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ வைத்தனர். அதில், அவர்கள் 3 பேரும் குதித்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்தனர்.அங்கு கரிக்கட்டையாக கிடந்த மூன்று பேரது உடல்களையும் கைப்பற்றினர். அவர்களின் அருகில் கிடந்த தற்கொலை குறிப்பு அடங்கிய கடிதம் ஒன்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சவுலி மடத்தின் தலைவரான கணேஷானந்த சுவாமிகள் மர்மமான முறையில் கடந்த பிப்ரவரியில் மரணம் அடைந்ததால் வேதனை அடைந்த அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.; லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வழிபடும் இடமான இந்த மடத்தில் சொத்து தொடர்பான விவகாரங்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. nakheeran.in

கருத்துகள் இல்லை: