வியாழன், 11 ஏப்ரல், 2013

அஞ்சலி எங்கே?புது புது கேள்விகள் ! ஊகங்கள் !

எந்த மீடியாவைப் பார்த்தாலும் அஞ்சலி அஞ்சலி என்று கதறிக் கொண்டிருக்க
, அஞ்சலியின் செல்போனில் இருந்து எங்கெங்கெல்லாம் அழைப்புகள் சென்றன என்பதை துருவிக் கொண்டிருக்கிறது ஆந்திரா போலீஸ்
சித்தப்பா சூரிபாபுவிடம் சொல்லி கொள்ளாமல் ஹைதராபாத் தஸ்பல்லா ஹோட்டலில் இருந்து காலை 8.05 மணிக்கு வெளியேறிய நடிகை அஞ்சலி, ஷம்ஷாபாத் ஏர்போர்ட்டில் உள்ள நோவாடெல் ஓட்டலில் காலை 10.20 மணி வரை தங்கி இருக்கிறார். பின்னர் அங்கிருந்து வெளியேறி விட்டார்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் அவரது செல்போனில் இருந்து 18 அழைப்புகள் சென்று உள்ளன.
அவற்றை போலீசார் ஆய்வு செய்ததில் அமெரிக்காவில் இருக்கும் ஒரு டாக்டரிடம் அவர் பேசி இருப்பதும், கடைசியாக வேணு மல்லாடி என்ற தெலுங்கு புதுமுக நடிகரிடம் பேசி இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. மற்ற அழைப்புகள் பற்றி ஆய்வு செய்து வருவதாக சொல்கிறார்கள் போலீசார்.
அஞ்சலி அவரது தாயாரிடம் பேசியதாக கூறப்படும் தகவலை நம்புவதற்கில்லை என்றும் போலீசார் கூறினார்கள்.
இதற்கிடையே, நடிகை அஞ்சலி சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு டாக்டரிடமும் பேசியதாகவும் இது தொடர்பாக ஆந்திர போலீசார் விசாரிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆமா இந்த புதுமுக நடிகர் விவகாரம் என்ன… புதிதாக இருக்கிறதே!

கருத்துகள் இல்லை: