வியாழன், 11 ஏப்ரல், 2013

இலங்கைத் தமிழர்கள்: தமிழக கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை

இலங்கைத் தமிழர்கள் தமிழக அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை வைத்திருக்கவில்லை, தங்களுக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளே ஆதரவாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள் என மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.26 லட்சத்தில் காரைக்கால் புளியங்கொட்டை சாலை மேம்படுத்துதல் பணிக்கான பூமி பூஜை விழாவில் பிரதமர் அலுவலக விவகார இணை அமைச்சர் வி.நாராயணசாமி புதன்கிழமை கலந்து கொண்டார்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர்,
இலங்கைத் தமிழர்கள் மீது நலன் கொண்டது காங்கிரஸ் கட்சி மட்டுமே. தமிழக கட்சிகள் சில, இலங்கைத் தமிழர்களுக்காக போராடுகிறார்கள். மாணவர்ளை தூண்டிவிடுகிறார்கள்.
மத்திய அரசு இலங்கை தமிழர்கள் பகுதி மேம்பாட்டுக்கு ரூ.2500 கோடி நிதியுதவி அளித்து, ரயில் திட்டத்திற்கு நிதியுதவி உள்ளிட்ட பல சலுகைகளை செய்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாசுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றபோது, தங்களுக்கு தமிழக கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை, மத்தியில் காங்கிரஸ், பாஜக போன்ற தேசியக் கட்சிகள் நன்மை செய்யும் என்றே நம்புவதாக இலங்கை தமிழர்கள் கூறியதாக அக்குழு தெரிவிக்கிறது. இவ்வாறு பேசினார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: