செவ்வாய், 9 ஏப்ரல், 2013

நடிகை அஞ்சலி: என்னை உயிரோடு விட்டால் போதும்! கொத்தடிமையாக வைத்து பணம் பண்ணிய களஞ்சியமும் பாரதிதேவியும்

இவன்தான் அந்த களஞ்சியம் எங்கே மறைந்திருக்கிறான் என்று பாருங்கள் 
டைரக்டர் களஞ்சியம் அஞ்சலியை பற்றிய தெரியாத ரகசியங்களை போட்டுஉடைப்பேன் என்று பேட்டி கொடுத்துள்ளார் .இந்த பேட்டிஒன்றே போதும்  இவர் யாரென்று  தெரிகிறது ,  இவர்அஞ்சலியைகடுமையாக பயன்படுத்தி அவரின் சொத்துக்களைஎல்லாம்சூறையாடி இருக்கிறார்என்பதை நிரூபிக்கஇதைவிட வேறு ஒப்புதல்வாக்குமூலம்தேவைஇல்லை அஞ்சலியின் உயிருக்கு நிச்சயம் ஆபத்துஇருப்பதாகதான்தெரிகிறது 

நான் இப்போது ஹைதராபாத்தில் இருக்கிறேன். ஆனால் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை சொல்லமாட்டேன். அப்படி சொன்னால் எனக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சுகிறேன். விரைவில் களஞ்சியம் மீதும் எனது சித்தி மீதும் போலீசில் புகார் கொடுப்பேன்.”- என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்
 சித்தி பாரதிதேவியும், இயக்குனர் களஞ்சியமும் இதுநாள்வரை என்னை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். சினிமாவில் நான் நடித்து சம்பாதித்த சொத்து முழுவதையும் அவர்கள்தான் வைத்திருக்கிறார்கள். சென்னை வளசரவாக்கத்தில் ஒரு வீடு தான் என் பெயரில் உள்ளது.
இத்தனை நாள் அவர்களின் கொடுமையை நான் தாங்கிக்கொண்டேன். சமீபகாலமாக அவர்களது கொடுமை எல்லை மீறிவிட்டது. சினிமாவில்தான் நான் உறசாகமாக ப்ரீயாக இருப்பதுபோல் தோன்றுகிறேன்.அப்படி வெளியுலகுக்கு என்னை கலர் புல்லாக காட்டி விட்டு வீட்டுக்கு சென்றதும் சித்தியும், டைரக்டர் களஞ்சியமும் என்னை டார்ச்சர் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.என்னை யாரும் போனில் தொடர்புக் கொண்டால் கூட அதை வைத்து கேள்விகளாக கேட்டு மெண்டலாக்க முயன்றார்கள்..
அவர்களுக்கு பதில் சொல்லாமல் இருந்தால் கையில் கிடைத்ததை எடுத்து என்னை அடிப்பார்கள். இதையடுத்து என்னை சுதந்திரமாக விடச் சொல்லி கேட்டதும் இன்னும் மிரட்ட தொடங்கிவிட்டார்கள்.எங்கே என்னை கொலை செய்து விடுவார்களோ என்று எனக்கு இப்போதும் பயமாக இருக்கிறது. என் அம்மாவையும் கூட அவர்கள் மிரட்டுகின்றனர். நான் இதுவரை சம்பாதித்த சொத்துக்களைகூட அவர்களே எடுத்துக் கொள்ளட்டும். என்னை உயிரோடு விட்டால் போதும். எப்படியோ தப்பித்து வந்து ஹைதராபாத்தில் நான் இப்போது இருக்கிறேன்.
ஆனால் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை சொல்லமாட்டேன். அப்படி சொன்னால் எனக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சுகிறேன். விரைவில் களஞ்சியம் மீதும் எனது சித்தி மீதும் போலீசில் புகார் கொடுப்பேன்.மேலும் இந்த பிரச்னைக்கு காரணம் ஜெய்யை நான் காதலிப்பதுதான் என்றும் அவர்கள் கட்டிவிட்ட கதைதான்.அது மட்டுமில்லாமல் நான் வேறு யாருடனோ ஓடிவிட்டதாக கூட சித்தி அவதூறு பரப்பக்கூடும். அதனால்தான் உணமைகளை கேட்கும் பத்திரிகையாளர்களிடம் நடந்த்தைச் சொல்கிறேன்.விரைவில் எல்லா பத்திரிகையாளர்களையும் சந்தித்து இன்னும் நிறைய பேசுகிறேன்””.என்று அஞ்சலி தெரிவித்தார். இந்த சம்பவத்தால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: